பக்கம் எண் :

110மனோஹரன்[அங்கம்-3

கொண்டிருந்தது நியாயமாவென்றும், இது தமக்கும்
இழிவன்றோ வென்றும் கேட்டிருந்தேன்.

பு. எனக் கெழுதிய நிருபத்திலா?

ப. ஆம் !  சந்தேகமென்ன? வேறு யாருக்கு நான் இப்படி
எழுதுவது?-மஹாராஜா !  என்ன சமாசாரம்?

பு. சந்தேகமில்லை !  சந்தேகமில்லை !  அந் நிருபங்கள் மாறுபட்
டிருக்கவேண்டும் பத்மாவதி !  பத்மாவதி !  இன்று என்
மனத்திலிருந்த ஒரு பெரும் பாரத்தைப் போக்கினை.
இப்பொழு தெல்லாம் தெளிவாய் விட்டது-அப்பா ! 
இனிமேல் நான் மனச்சஞ்சலமின்றி உறங்குவேன். -
கண்ணே !  கண்ணே !  உன்மீது வீணில் என்ன சந்தேகங்
கொண்டேன் ! 

ப. மஹாராஜா !  என்ன சமாசாரம்?

பு. கண்ணே, நீ எனக்கும் சத்தியசீலருக்கும் எழுதிய நிருபங்
கள் மாறுபட்டிருக்கவேண்டும். அதைக்கொண்டே உன்
மீது நான் சந்தேகங்கொண்டேன், இத்தீமைகளெல்லாம்
நேர்ந்தன. நான் உடனே சென்று நீலவேணியை
விசாரித்து, இன்னும் இதனுண்மையை அறிந்து விடுகி
றேன். அவளே அந்நிருபங்களை யென்னிடங் கொடுத்
தாள் ;  நான் இதோ வந்துவிட்டேன் !  என்னை மன்னிப்
பாய் !                        [விரைந்து போகிறார். ] 


                 காட்சி முடிகிறது.