பக்கம் எண் :

12மனோஹரன்[அங்கம்-1

வா? சபையில் இந்தப் பத்மாவதியின் சிம்மாசனத்திலேயே
மஹாராஜா என்னைத் தமதருகில் உட்காரவைத்துக்
கொள்ளும்படி செய்கிறேன்! இனி நான் தாமதிக்கலா
காது, உடனே மஹாராஜாவிடம் போகவேண்டும்.

                                 (போகிறாள்.)

காட்சி முடிகிறது.


மூன்றாம் காட்சி.


இடம்:- அரண்மனையில் வசந்தசேனையின் இருப்பிடத்தைச்சார்ந்த ஓர் விடுதி.

காலம் - மாலை.

வசந்தன் வேகமாய் ஓடி வருகிறான். விகடன் மெல்லப் பின்புறமாக
வருகிறான்.

வ. சந்தேக மில்லை!

விக. சந்தேக மில்லை!

வ. கொஞ்சங்கூட சந்தேக மில்லை.

விக. கொஞ்சங்கூட சந்தேக மில்லை.

வ. சந்தேக மில்லை ஐயா, இண்ணா!

விக. ஆமையா, சந்தேகமே யில்லை!

வ. என்னத்துக்கு?

விக. ஆ!- அதுதான் உங்களெக் கேக்கணுமிண்ணு இருந்
தேன்; என்னாத்துக்குச் சந்தேகமில்லை?

வ. உலகங் கெட்டுப் போச் சையா இன்றேன்!

விக. சந்தேகமில்லை, உலகந்தான் கெட்டுப் போச்சே, கேட்பா
னேன்?

வ. ஐயா, ஒரு பேச்சு சொல்றேன், உலகம் கெட்டுப் போச்சு,
கெட்டுப் போச்சு உலகம், போச்சு கெட்டு உலகம்!
பூட்டுது! பூட்டுது! பூட்டுது!