| விக.
|
பூட்டுது! பூட்டுது! பூட்டுது!
|
| வ.
|
சந்தேகமில்லை!
|
| வி.
|
சந்தேக மில்லை. தங்களுக்குச் சந்தேகமென்பதே ஏது?
புத்தியிலே எதுவானாலும் இருந்தாலல்லவோ சந்தேகம்
வரணும். அங்கேதான் ஒண்ணு மில்லையே! நண்ணா
சொன்னைங்கோ சொன்னாலும், ஒரு புத்தியில்லாத
பேச்சு!
|
| வ.
|
ஏன் ஐயா? என்னை புத்தியில்லாதவனிண்ணா சொல்
ரைங்கோ?
|
| விக.
|
தங்களை அப்படி சொல்வேனோ? புத்தியில் ஆதவன்,
சூரியனுக்குச் சமானமானவனே இண்ணு, சொன்னேன்.
|
| வ.
|
சந்தேக
மில்லை ஐயா, இண்ணா!
|
| விக.
|
அதெல்லா மிருக்கட்டுமையா-இப்போ எனக்கு ராணி
ஒரு வயித்தியனே ஏற்பாடு செய்திருக்கிறாங்களாமே,
எனக்கு வயித்தியன் என்னாத்துக்கு இண்ணு ஒரு
கேள்வி கேக்கறே?
|
| விக.
|
நண்ணா கேட்டைங்கோ ஒரு முட்டாள் கேள்வி. நானுங்
கேக்கரே, என்னாத்துக்கு உங்களுக்கு வயித்தியன்? என்னாத்துக்கு?
|
| வ.
|
எனக்கு என்னா புத்தி கெட்டுபோயிருக்குதா?
|
| விக.
|
என்னமா கெடும்? அது இருந்தா அல்லவோ கெட?
அது இல்லவே யில்லயே என்னமா கெடும் அது?
|
| வ.
|
சந்தேகமில்லை! இந்த வயித்தியனுக்கு பயித்தியம் புடிச்சி
யிருக்குது!
|
| விக.
|
சந்தேகமில்லை! வயித்ய மிண்ணா என்னா, பயித்திய
மிண்ணா என்னா? வயித்தியரெல்லாம் பயித்தியம் புடிச்சிப்
போனவங்கதானே.
|
| வ.
|
உம் -வயித்தியரு என்னா மருந்து கொடுப்பாரு?
|
| விக.
|
ஏ!என்ன கொடுக்கப்போறாரு? நேர்வாளம், கீர்வாளம்,
ஒரு பத்து பலம் கொடுக்கப்போறாரு அவ்வளவுதான்.
அப்றம் கொடுக்றதெது? அத்தோடே சரி!
|