| வ.
|
எனக்கு மருந்து கொடுத்தா மண்டேயே பேத்துடமாட்
டேனா! சந்தேகமில்லை!
|
| விக.
|
சந்தேகமில்லை,
உங்கவீரம் கேப்பானேன்? பூரம்தானே!
|
| வ.
|
ஆமாம்-ஒருவேளை
அம்மா கோவிச்சிக்கினா என்னா
செய்யரது?
|
| விக.
|
ஆ!-
அது வொரு சந்தேக மிருக்குது-என்னா செய்யலாம்?
|
| வ.
|
ஐயா!
நான் சொல்றபடி செய்யறிங்களா? மொள்ள அந்த
வயித்தியரே அனுப்பிச்சிடுங்க, உங்களுக்கு இந்த
முத்து மாலே தர்ரேன்.
|
| விக.
|
ஆமாம்,
அப்றம் உங்க பழய வயித்தியரே தெரித்தூட்டேன்
இண்ணு, சின்னராணி கோவிச்சிக்கினாங்களே,
அப்புறம் இதுக்குங் கோவிச்சிக்கினா?
|
| வ.
|
அதெல்லாம்
நான் சொல்லிடுறேன்.
|
| விக.
|
ஐஐயோ!
அதோ வர்ராப்போலே யிருக்குதையா வைத்
தியரு உங்களே தேடிக்கினு! எங்கேயானாலும் ஒளிச்சிக்
கிங்கோ! ஒளிச்சிக்கிங்கோ! நான் பேசி அனுப்பிச்சூட்றேன்!
ஒளிச்சிக்கிங்கோ! ஒளிச்சிக்கிங்கோ!
[வசந்தனை யொரு பெட்டிக்குள்
ஒளிந்துகொள்ளச் செய்கிறான்.]
அதோ வர்ராப்போலே யிருக்குது, ஒரு வேடிக்க பண்
ணுவோம். நம்பளும் அவரெப்போல் ஒரு வயித்திய
வேஷம் போட்டுக்குவோம்! [போகிறான்.]
|
எதிர்ப்புற
மிருந்து நீலவேணியும் அமிர்தகேசரியும் வருகிறார்கள்.
|
| நீ.
|
இங்குதானிரும்.
நான் போய்ச் சின்ன ராணி எங்கே
என்று பார்த்துவிட்டு வருகிறேன். [போகிறாள்.]
|
[அமிர்தகேசரி
ஒரு புறமாக உட்கார்ந்து
தன் ஓலைப்புஸ்தகத்தை விரித்துப்
படிக்கிறான். விகடன் மெல்ல வந்து
அவன் பக்கத்தி லுட்கார்ந்து தானும்
ஒரு ஓலைப் புஸ்தகத்தை விரித்து
அவனைப்போல் படிக்கிறான்.]
|
|