பக்கம் எண் :

காட்சி-3]மனோஹரன்15

அ.

[கொஞ்சம் திடுக்கிட்டு] ஐயா! தாங்கள்-

விக. உம்-

அ. தங்களுடைய-

விக. உம்-

அ. தங்களுடைய நாம தேயம்-

விக. உம்-

அ. தங்களுடைய நாமதேயத்தைக் கேட்கலாமோ?

விக. கேட்கலாம்.

அ. தங்களுடைய நாம தேய மென்ன?

விக. பன்ரெண்டி லொன்று சொல்லுங்கள்.

அ. தங்கள் பெய ரென்னவென்று கேட்கிறேன்.

விக. அதைத்தான் ஜோசியம் பார்த்துச் சொல்லுகிறேன்.

அ. இதேது பயித்தியம்போ லிருக்கிறதே!

விக. அடடா! நீங்களா? அண்ணா! அண்ணா! அண்ணா!

               [அவனை தழுவி கட்டிக்கொண்டு]

இத்தனை நேரம் தெரியாமல் போச்சே! என்னெ மறந்துப்
பூட்டைங்களா என்ன? அண்ணா! எல்லாரும் வீட்டிலே
க்ஷேமந்தானே? அண்ணி என்னமா யிருக்கிறாங்க?

அ. அப்பா என்னை விடு விடு! நீ யாரப்பா? எனக்குத் தம்பி
ஒருவனு மில்லையே!

விக. அண்ணா! இதுக்குள்ளே மறந்தூட்டைங்களா? நான் தான்
உங்க தம்பி யாச்சே!

அ. தம்பியாவது? நீ எப்படி எனக் குறவு? நீ யார்?

விக. எப்படி உறவா? இதுக்குள்ளே மறந்தூட்டைங்களே
அண்ணா! உங்க பாட்டனுக்குப் பாட்டனெயும் என்
பாட்டனுக்குப் பாட்டனெயும் ஒரே புலி முழிங்கூட்டுதே,
மறந்தூட்டைங்களா? நீங்கதான் மறந்துட்டாலும்
நான் மறக்கமாட்டேன் நம்பளுடைய பந்துத்வத்தே!