பக்கம் எண் :

16மனோஹரன்[அங்கம்-1

அ.

ஐஐயோ! அப்படி யொன்றுமில்லை. நான் உன் பந்து
வல்ல, எனக் குன்னைத் தெரியாதே! தெரியாதே!

விக. இல்லெ, இல்லெ, நீங்க என் அண்ணாதான்! நான் விட
வேமாட்டேன்!

அ. ஐயோ சனி- என்னை விடப்பா! நீ என் தம்பிதான்,
விடு விடு!-இதென்ன பெரிய இழவாக இருக்கிறது-
அப்பா, இந்த அரண்மனையில் உனக் கென்ன வேலை?

விக. அந்த வேலெயெ யேன் கேக்கரைங்கோ? சின்ன ராணிக்கு
ஒரு புள்ளெ இருக்கிறாரு; பெரிய பயித்தியம்! அவ
ரோடே எப்பவும் இருந்துக்கினு அவர் ஒருத்தருக்கும்
கெடுதி செய்யாமலிருக்கும்படி பாத்துகிறது.

அ. அவர் என்ன எல்லோரையும் அடிக்கிறாரா என்ன?

விக. அந்த எழவே கேக்காதைங்கோ! யாரானாலும் புதுசா
வந்தா போதும்; பாத்துட்டாரோ யமலோகந்தான்!

அ. அப்படியா?

விக. ஆமாம். நீங்க என்னாத்துக்கு வந்தைங்கோ அண்ணா?

அ. அந்த ராஜகுமாரருக்கு வயித்தியஞ் செய்ய வந்திருக்கிறேன்,
சின்ன ராணியின் உத்திரவுபடி. அப்பா, நீ
சொல்லும்படியான அவ்வளவு துஷ்டராயிருந்தால் நான்
என்ன செய்வது?

விக.அண்ணா! அண்ணா! ஐஐயோ! இதென்ன. சங்கடமா
யிருக்குது! உங்களே பாத்தாருண்ணா தவிடு பொடி
யாக்கி விடுவாரே! இதுக் கென்னா செய்றது?

அ. இதற் கொரு யுக்தியு மில்லையா?

விக. ஒண்ணு மில்லே! சந்தேக மில்லை!

வ.[பெட்டிக்குள் ளிருந்து] சந்தேக மில்லை! சந்தேக மில்லை!

அ.யார் அது? யார் அது?

விக. ஐஐயோ அவர் இங்கு வர்ராப்போலே இருக்குதே! எதிரிலே
பாத்தா உங்க பாடு தீந்துது!