| அ. | அப்பா! நான் என்ன செய்வது? என்ன செய்வது?
|
| விக. | நான் சொல்றபடி கேளுங்கோ, இங்கே எங்கே யானாலும் ஒளிச்சிக்கினு இருங்கோ, நான் போயி சமாதானப் படுத்தி அழெச்சிக்கினுவர்ரேன்.
|
| அ. | எங்கே ஒளித்துக்கொள்வது? எங்கே ஒளித்துக்கொள்வது?
|
| விக. | அதோ அந்தப் பெட்டியிலே ஒளிச்சிக்கிங்கோ!
[பெட்டியைக் காட்டிவிட்டுப் போகிறான். அமிர்தகேசரி பெட்டியைத் திறந்து உள்ளே நுழையப் பார்க்க, வசந்தன் அதனுள்ளிருந்து வெளியிற் கிளம்பி அமிர்தகேசரியைப் பிடித்துக் கொண்டு, 'சந்தேகமில்லை! சந்தேகமில்லை!? என்று கூச்சலிடுகிறான். அமிர்த கேசரி பயந்து போகிறான்.]
|
கூச்சலைக்கேட்டு நீலவேணியும் வசந்தசேனையும் ஓடி வருகிறார்கள்.
|
| வனை. | இதென்ன! இதென்ன!
|
| வ. | அம்மா, நான் இங்கே ஒளிச்சிக்கினு இருந்தேன்; இவர் வந்து என் தலெமேலெ உக்காரப்பாத்தாரு, நான் ஒத் துக்குவேனோ? மாட்டேன் - சந்தேகமில்லை! நீங்க ஓணு மிண்ணா யாரெயிண்ணாலும் கேளுங்கோ!
|
| அ.
|
ராஜமகிஷி! நான் அறியாமற் செய்த பிழையை
மன்னிக்க
வேண்டும். இங்கே யாரோ ஒருவர் இருந்தார், அவர் ராஜ
குமாரர் வருவார், உன்னைக் கண்டால் கெடுதி செய்வார்,
இதற்குள் மறைந்துகொண்டிரு, என்று என்னிடம் கூறினார்-
|
விகடன்
தன் வேஷத்தைக் களைந்துவிட்டு மறுபடியும் மெல்ல
வருகிறான்
ஒரு புறமாக.
|
| விக.
|
அம்மணி,
நமஸ்காரம்; என்ன சமாசாரம்? என்ன சங்
கதி? என்ன விசேஷம்? என்ன தாத்பரியம்?
|
| வனை.
|
விகடா?
இதெல்லாம் உன் வேலையா?
|