பக்கம் எண் :

காட்சி-3]மனோஹரன்19

அ.

என்னிடத்திலே இந்த பித்தத்திற்கு ஒரு மாத்திரை
இருக்கிறதுங்கோ-

விக. அந்த மாத்திரெ சாப்பிட்டவுடனே வைகுண்ட யாத்
திரை தானுங்கோ!

அ. இல்லை, ஐயா, அப்படியல்ல அந்த மாத்திரையை மூன்று
வேளை புசித்தால் அப்புறம் மருந்தே சாப்பிடவேண்டிய
தில்லை.

விக. வாஸ்தவம், மூணுவேளெ சாப்பிட்ட பிற்பாடு, அப்புறம்
மருந்து என்னாத்துக்கு? ஆளே பூட்டா அப்புறம் மருந்
தெங்கே சாப்பிட்றது? சந்தேகமில்லை!

வ. சந்தேகமில்லை.

வனை. விகடா! நீ பேசாமலிருக்கமாட்டாயா?

விக. இல்லை, அம்மணி. பேசாமலிருக்கிறத்துக்குத்தான் மாத்
திரெ சொல்றாரே எங்க அண்ணா!

அ. ராஜபத்தினி, இதேமாதிரியாக எங்கள் ஊரில் ஒருவருக்கு
வியாதி கண்டிருந்தது நாலைந்து மாதங்களுக்கு முன்
பாக, அனேக வைத்தியர்கள் வந்து பார்த்து அசாத்திய
மென்று கைவிட்டார்கள். பிறகு நான் போய் இந்த மாத்
திரையை மூன்று வேளை கொடுத்தேன், போய்விட்டது.

விக. உயிரா? ஐயோ பாவம்!

அ. இல்லை, ஐயா, நோய் போய்விட்டது.

விக. வாஸ்தவந்தான் நோய் போய்விட்டது, அத்தோடே
அவரும் போய்விட்டார். தாங்களென்ன கால் மாடோ,
தலை மாடோ?

நீ. பேசாமலிரு மையா!- அம்மா, எப்படியாவது தாங்கள்
அனுக்கிரகிக்க வேண்டும்-

வனை. நீலவேணி, அதற்கென்ன? அப்படியே ஆகட்டும், நான்
சொன்னபடி செய்யாமற்போவேனா? [அமிர்தகேசரிக்கு]
ஐயா, உம்மை இளவரசருக்கு வயித்தியராக நியமித்