பக்கம் எண் :

20மனோஹரன்[அங்கம்-1

இன்றுமுதல் ஆரம்பித்து சீக்கிரம் இவனது
வியாதியைத் தீர்க்கவேண்டும். உம்முடைய பெயரென்ன?

அ. அமிர்தகேசரி.

விக. அமிர்தவேசரி!

அ. இல்லை, ஐயா, பரிகாசம் பண்ணாதீர், அமிர்தகேசரி.

விக. மன்னிப்பு நான் சொன்னது தப்புதான், இதுவேசரி!

வனை. பேசாமலிருக்கமாட்டாய் நீ? வா, உனக்குத்தகுந்த தண்டனை
விதிக்கிறேன்! வசந்தா, இதோ இருக்கிற அமிர்த
கேசரி சொற்படி நீ நடந்துவரவேண்டும். இல்லாவிட்
டால் உன்னை நான் தண்டிப்பேன். விகடா, வசந்தன்
அமிர்தகேசரி சொற்படி நடக்கும்படிச் செய்யவேண்டும்நீ.
அவர்களிருவரும் சச்சரவிட்டுக்கொண்டால் உன்னை
அரண்மனையினின்றும் நீக்கிவிடுவேன்.

விக. அம்மணி! இது நல்ல வேலெயாயிருக்குதே! இவங்க
சண்டே போட்டுக்குனா எனக்கு தண்டனெயா? அம்
மணி, இந்த வேலெ எனக்கு வாணாம், வாணாம்!

வனை. விகடா, அப்படியல்ல அவர்கள் சமாதானமாயிருக்கும்
படி செய்; வசந்தன் வியாதி நீங்கினால் உனக்கு நல்ல
பரிசளிக்கிறேன்.

                  [ஒரு தாதி வந்து வசந்தசேனை
                    யின் செவியில் ஏதோ ரகசிய
                    மாய்க்கூற, அவளுக்குத்தானும்
                    ரகசியமாக விடைகொடுத்தனு
                    ப்புகிறாள்.]

சரிதான், நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்.

                  [அமிர்தகேசரி, விகடன், வசந்தன்,
                    நீலவேணி போகிறார்கள்.]

இப்பொழுதுதான் நமக்கு நல்லகாலம் பிறந்திருக்கிறது!
இனி பத்மாவதி இறப்பாளென்பதற்குச் சந்தேகமில்லை!
அவளிறப்பாளாயின் மனோஹரனும் இறப்பான் துயராற்றாது;
விஜையாள் கருவோடு உடன் செல்வாள். பிறகு
நாம் கவலையற்று வாழலாம். அப்பா!