| ம. | அம்மணி, அதை இன்னதென்று கூறும், ஒரு க்ஷணத் தில் முடித்துவிடுகிறேன்.
| | பத். | அத் துஷ்டனாகிய முத்துவிஜயபாண்டியனது சென்னியை இவ் வுடைவாளால் சேதித்து, அவன் நம்மிடமிருந்து கவர்ந்த நாடு நகர முதலியவற்றையெல்லாம் மீட்கவேண் டும்.கண்ணே, செய்வையா நீ இதை?
| | ம. | அம்மணி, உமதருளாலும், தெய்வகடாட்சத்தினாலும், எனது புஜபல பராக்கிரமத்தினாலும் அப்படியே செய் கிறேன் - இது சத்தியம்.
| | பத். | கண்ணே, இவ் வுடைவாளால் உனது பகைவரை யமனுல குக்கேற்றி, உனது சபதத்தை நிறைவேற்றி, உனது கீர்த் தியையும் புகழையும் நிலைபெறச் செய்து, சீக்கிரம் உனது தந்தையும் நானும் மகிழும்படி வெற்றி வீரனாகத் திரும்பி வருவாய்!
| [பத்மாவதி உடைவாளை மனோ ஹரன் கையில் கொடுக்கிறாள். அரண்மனைக்கு வெளியில் ஒரு ங்கு சேர்க்கப்பட்ட சைனியங் கள் "ஜெய! ஜெய" என்று கோஷிக்கின்றன.]
| | | ரா. | அம்மா, நற் சகுனமும் நமக்கு வாய்த்தது. இளவரசர் அப்படியே வெற்றி பெற்று வருவார் என்பதற்குத் தடையில்லை.
| | சத். | அதற்குச் சந்தேக மென்ன?
| | பத். | மனோஹரா, உனது பாட்டனாரும் முன்னோர்களும் உட் கார்ந்து ராஜரீகம் செலுத்திய சிம்மாசனம் பாண்டியனது சபையிலிருக்கிறது; அதையும் எப்படியாவது மீட்டுக்கொண்டு வா. உனது பாட்டனார் அதை எனக்கு ஸ்திரீதனமாகக் கொடுக்க எண்ணியிருந்தார்.
| | ம. | அப்படியே ஆகட்டும், அம்மா, நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன் - நேரமாகிறது.
| | ரா. | ஆமாம், அம்மா, படைகளெல்லாம் அணி வகுத்து நிற் கின்றன. - புறப்படும், லக்னம் வந்துவிட்டது.
| |
|
|