பக்கம் எண் :

4மனோஹரன்[அங்கம்-1

பத்.கண்ணே, சுகமாய்ப் போய்வா.
                    [மஞ்சத்தின்மீது சாய்ந்து விடுகிறாள்.]

ம. அப்பா! முக்காற் பாகம் தொந்திரவு தீர்ந்தது. இன்னும் காற்பாக மிருக்கிறது - [விஜயான் திரும்பி] விஜயா, நான் போய் வரவா ?

வி.[தன் கணவன் கரத்திற் சாய்ந்து] பிராணநாதா! பிராணநாதா
                                      [அழுகிறாள்.]

பத். விஜயா! இப்பொழுது நீ கண்ணீர் விடலாமா? உனது
கணவனுக்கு ஒரு குறையும் வராது, சந்தோஷமாய்
மங்கள வார்த்தை கூறியனுப்பு.

வி.பிராணநாதா! உம்மை நான் எப்படி விட்டுப் பிரிந்திருப்
பேன்? எப்படிப்பட்ட வீரர்களும் மடியும் அமர் பூமியில்
உம்மை நான் மனதொப்பி எப்படி யனுப்புவேன்.

     ராகம் - நாதநாமக்கிரியை, தாளம்- திரிபுடை.

                பல்லவி.

        ஐஐயோ! எப்படிப் பிரிவேன்
            என் பிராணநாதா உமைவிட்டு         (ஐ)

               அநுபல்லவி.

        வையமீதி லுமைப்போல
            வாக்கை மறப்பாருளரோ.             (ஐ)

                 சரணம்.

        நெஞ்சமதி லுமக் கென்மேல்
            கொஞ்சமேனு மிரக்க மிலையோ
        தஞ்சமாயுமை வஞ்சியடைய
            அஞ்ச லென்றே அறையீரோ.         (ஐ)


ம. விஜயா, நீ யொன்றும் அஞ்சவேண்டாம். நான் மீண்டு
வருமளவும் என் தாயார் உன்னைப் பார்த்துக்கொள்
வார்கள்.