பக்கம் எண் :

6மனோஹரன்[அங்கம்-1

ம. [தன் தாயாரிடமும் விஜயாளிடமும் விடைபெற்று] நான் போய்
ஜெயித்து வருகிறேன்!

[மனோஹரன், ராஜப்பிரியன், சத்
  தியசீலர் மூவரும் போகின்றனர்.
  பத்மாவதி தன் முகத்தை
  முன் தானையால் மூடி மஞ்சத்
  தின்மீது சாய்ந்து விடுகிறாள்.
  விஜயாள் தேம்பியழுது பத்
  மாவதியின் மடியின்மீது வீழ்கிறாள்.]

காட்சி முடிகிறது.


இரண்டாவது காட்சி.


இடம்:-அரண்மனையில் வசந்தசேனையினுடைய அந்தரங்கமான அறை.

காலம்: - மாலை.

வசந்தசேனையும், நீலவேணியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

வனை. நீலவேணி, அன்றைத்தினமே இவ்விஷயங்களையெல்லாம்
ஏன் என்னிடம் வந்து கூறவில்லை?

நீ. நான் என்ன செய்வேன்? இந்த இரண்டு தினங்களும்
எனக்கு ஓயாது வேலை யிருந்தது அவ்வரண்மனையில்.
திடீரென்று வந்துவிட்டால் ஏதாவது என்மீது சந்தேகங்
கொள்ளமாட்டார்களா?

வனை. ஆம் உன்மீதும் குற்றமில்லை; இப்பொழுதாவது வந்து
கூறினையே அம்மட்டும். சரிதான், நீ விரைவிற் சென்று
இன்னும் அங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்து அப்
போதைக் கப்போது என்னிடங் கூறிக்கொண்டிரு.

நீ. அப்படியே, அம்மணி, அதை நான் மறப்பேனா? ஒரு
காலும் மறக்கமாட்டேன். - அம்மா, என்னுடைய தமயனார்
அமிர்தகேசரியைப்பற்றி முன்பே தங்களிடம் கூறி
யிருக்கிறேன், அவர் எப்படியாவது நம்முடைய ராஜ
குமாரருக்குக் கண்டிருக்கும் வியாதியைப் போக்கிவிடுவ