பக்கம் எண் :

62மனோஹரன்[அங்கம்-2

வனை.

அப்படியா? கொடு இப்படி அதையும்.

நீ.

[ மெல்லிய குரலுடன் ]  மஹாராஜாவின் நிருபத்தை ஒரு
வருமறியாத சமயம் பார்த்துக்கொடுக்கும்படி கட்டளை
யிட்டார்கள்.

வனை.

உம் !  அப்படியா?-இதிலென்ன எழுதியிருக்கிறது
பார்ப்போம்-  [ நிருபத்தைப் பிரித்து வாசிக்கிறாள். ] 
"ஐயா, தாம் இந்த ராஜ்யத்தில் உயிருட னிருக்கும்
பொழுது இப்படிப்பட்ட அநியாயம் நடக்கலாமா?
மனோஹரனை ஒருத்தி வேசிமகன் எனக்கூறினால் தாம்
அதைக்கேட்டுக்கொண்டு வாளாயிருப்பதா? இதுவோ
உம்முடைய நீதி? மிகவும் அழகாயிருக்கிறது !  இது
வரையில் நற்பெய ரெடுத்தது எதற்கு லாபம்? இது
ஒன்றால் உமது புகழெல்லாம் அழியுமன்றோ? தாம் இவ்
வசையைப் பொறுத்துக் கேட்டுக்கொண்டிருந்ததற்கு
சீக்கிரம் நியாயமறிய விரும்புகிறேன். இங்ஙனம், பத்
மாவதி"- ஆஹா !  வசந்தசேனை அதைரியப்படாதே ! 
-சற்று முன்பாக இனி என்ன இருக்கிறதென ஏங்கி
யிருந்தே னல்லவா? தெய்வம் என்னுடைய பங்கில்
இருக்கிறதென்பதற்குச் சந்தேகமில்லை. நல்லயோசனை! 
இந்த யோசனை எனக்கன்றி வேறு யாருக்குத் தோன்றும்?

                  [ரகசியமாக நிருபங்களை மாற்றி
                     விடுகிறாள். ] 

நீலவேணி, உன்னையொத்த புத்திசாலிகளுடைய உதவி
யிருக்குமளவும் எனக் கென்ன குறை?

நீ.

அம்மா, எனக் கென்ன புத்தி யிருக்கிற தம்மா?

வனை.

அப்படி யல்ல. உன் புத்தி உனக்குத்தெரியுமோ?
பிறருக்கல்லவோ தெரியும் ;  உன்னுடன் பல நாள் பழகி
வந்த எனக்கல்லவோ தெரியும்.