பக்கம் எண் :

காட்சி-1]மனோஹரன்65

மூன்றாவது அங்கம்

முதற்காட்சி

இடம் :-  அரண்மனையில் அந்தரங்கமான ஓர் அறை- காலம்-பகல்.

புருஷோத்தமராஜன் வருகிறார்.

பு.

சீ !  இந்த வசந்த சேனையினாலேதான் நமக்கு எல்லாத்
துன்பங்களும் நேரிடுகின்றன !  பத்மாவதி என்னைப் பார்ப்
பது மில்லை. மனோஹரன் மகத்தான கோபங் கொண்டி
ருக்கிறான். பிரஜைகளெல்லாம் என்னை வெறுக்கிறார்
கள். இனி அதர்ம வழியில் நான் செல்வது நியாய
மன்று. இனிமேலாவது திருந்தி நற்பெய ரெடுக்க
வேண்டும் ;  இவ்வசந்தசேனையைப் பார்ப்பதும் தவறு !
 - ஆம் !  ஆம் !  வீண் தீர்மானங்கள் !  வீண் எண் 
ணங்கள் !ஐயோ ! என் மன வுறுதியை நான் என்னென்
றிகழ்வேன் !  இத் தீர்மானங்க ளெல்லாம் வசந்தசேனையின்
பாதத்தி லணிந்த கிண்கிணிச் சப்தத்தைக் கேட்கும்
பொழுதே எங்கோ பறக்கின்றன !  என் நல் லறிவெல்
லாம் அவளது முகப் பார்வை பட்டவுடனே எங்கோ
ஓடி ஒளிக்கிறதே !  இல்லாவிடின் அவளைச் சிம்மாசனத்
தில், பலரறிய சபையில், எனதருகில், உட்காரவைத்துக்
கொள்வேனோ? இல்லாவிடின் என் சொந்த மனைவியை
அவள் வேசியெனக் கூறவுங் கேட்டிருப்பேனோ?-
ஜகதீசனே !  உலகாளும் என்னை இவள் ஆள்கின்றனளே !
 -சீ !  இதென்ன வாழ்வு? எல்லோரும் நகையார்களா?
இனியாவது இவளது வலையிற் படாது தப்பிப் பிழைக்க
வேண்டும் !  
                                [ உட்காருகிறார். ] 

         வசந்தசேனை மெல்ல வருகிறாள்.

உன்னை யார் இங்கு வரச்சொன்னது? போ, இனி என்
முன் வரவேண்டாம் ! 

          9