பு. | கேள்! இப்படி உட்கார்-வசந்தசேனை, எதெப்படி யிருந்தபோதிலும் மனோஹரனையும் பத்மாவதியையும் நீ அவ்வாறு தூஷிக்கலாமா?
|
வனை. | பிராணநாதா, நான் தான் ஏதோ வாய் தவறிச் சொல்லி விட்டேனென்று ஏற்றுக்கொள்ளுகிறேனே ! இன்னு மென்ன? இவ் வேதனையை அனுபவிப்பதைவிட நான் இறத்தலே நலம்.
|
பு. | கண்ணே, போனது போகட்டும். இனி அதைக் குறித்து வருந்தாதே-இனி நீ இம்மாதிரி ஒருகாலும் கூறமாட் டாய், எனக்குத் தெரியுமே ; அழாதே, நான் சொன்ன படி கேள்.-என்ன சமாசாரம்?
|
வனை. | ஒன்று மில்லை, பிராணநாதா- களைத் திருக்கிறாற்போல் இருக்கிறதே ; காலையில் போஜனங் கொள்ள வில்லையோ?
|
பு. | இல்லை, கண்ணே.
|
வனை. | அது ஏனப்படி? நான் ஒரு வேளை பாராவிட்டால் எல் லாம் கெட்டுப்போய் விடுகிறது. நான் சென்று சித்தஞ் செய்யச் சொல்லவா?
|
பு. | வேண்டாம், சற்றுப் பொறுத்துப் போகிறேன்- வசந்த சேனை, அம்மட்டும் இரண்டுமுறை மனோஹரன் கரத்தி னின்றும் தப்பிப் பிழைத்தனையே ! நானருகில் இருந் திராவிடில் நீ இறந்தே யிருப்பாய் !
|
வனை. | அதைப்பற்றி யெல்லாம் இப்பொழுது யோசிப்பானேன்? பிராணநாதா, திருவையாற்றருகில் நமக்காக ஓர் நூதனத் துறை கட்டும்படி உத்திரவு செய்திருந்தீரே, அது முடிந்து போயிற்றா?
|
பு. | முடிந்துபோய் விட்டது.- மனோஹரன் அருகி லிருக்கும் பொழுது எப்பொழுதும் நீ மிகவும் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். சற்றும் யோசிக்காமல் என்ன மூடத் தனமாய் அவனை வேசி மகனென அழைத்தாய் !
|