கணக்குக் கற்கும் முறை வேறு; வரலாறு கற்கும் முறை வேறு; நிலவியல் முதலியவற்றைக் கற்பதற்கு உரிய முறை வேறு; நீதி நூல்களையும் சமய நூல்களையும் கற்கும் முறை வேறு; கதைகளையும் காவியங்களையும் கற்கும் முறை வேறு. |
கணக்குக் கற்கும் ஒருவன் தன் முயற்சியில் வெற்றி தோல்வியை ஒட்டிச் சிறு சிறு உணர்ச்சிகளை அடைவானே தவிர, கற்கும் கணக்கில் ஒருவகை உணர்ச்சியும் அடைவதில்லை. கணக்கில் அவனுடைய மூளை ஈடுபடுகிறது; பற்றற்று ஈடுபடுகிறது. சில வேளைகளில் தன்னை மறந்தும் கணக்கில் ஈடுபடுகிறான். ஆனால், தன்னை இழப்பது இல்லை; தான் கலப்பது இல்லை; நிலவியல் முதலியவற்றைக் கற்பவனுடைய நிலையும் அத்தகையதே. |
வரலாற்றைக் கற்பவன் சிலர் வாழ்ந்த வாழ்வைக் கற்கிறான். ஒரு சில இடங்களில் - உணர்ச்சிமிகுந்த இடங்களில் தவிர, மற்ற இடங்களில் - அவன் பெரும்பாலும் தான் கலக்காமல், தன்னை இழக்காமல் கற்கிறான். வரலாற்று மாந்தர் உற்ற இன்ப துன்பங்களைக் கேட்டறிவது போன்ற மன நிலையில் இருக்கின்றான். |
நீதி நூல்களையும் சமய நூல்களையும் கற்பவன், ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு மலை ஏறுபவன் போல், |