ஆனால், அந்தக் குழந்தையின் தாய் அதன் நடையைக் காணும் போது, இந்த எண்ணங்களை எல்லாம் கடந்து, உள்ளம் உருக, ஊன்உருக, அந்த நடையழகைக் கண்டு குழைவாள். கலைஞன் ஒருவன் வந்து கண்டாலும், அதன் அழகைப் பலவாறு உணர்ந்து பருகுவான்; குழந்தையின் நடையில் விளங்கும் ஆடல் துள்ளல் முதலியவற்றைக் கண்டு ஆடுவான், துள்ளுவான், பூரிப்பான்; தன் உள்ளத்தை அதன் பின்னே ஆடித் துள்ளிவிட்டுத் தானும் குழந்தையாவான். | வேலைக்காரிக்கு அதன் வரலாறு பழமையைச் சிந்திப்பதற்கு உரிய பகுதியாகிறது; மருத்துவருக்கு அதன் உடல்நிலை பகுத்தறிவுக்கு உரிய பொருளாகிறது; ஆனால் குழந்தையைப் பெற்று வளர்த்து உலகிற்கு நல்கும் தாய்க்குக் களிப்பூட்டுகின்ற அழகின் சிறப்பே கலைஞனுக்கும் விருந்தாகின்றது. | மூவகை ஆராய்ச்சியும் வேண்டியவைகளே; ஆயின், யாருக்கு எது தகும் என்ற தெளிவு இருக்க வேண்டும். | காவியம் ஒன்றைக் கற்கப் புகுகின்றவர் வரலாறு நோக்கமாகக் கொண்டால், அதன் ஆசிரியர், அவர் வாழ்க்கை, அவருடைய காலம், சூழ்நிலை முதலியவற்றை ஆராயலாம். | மொழியியல் ஆராய்ச்சியோ, இலக்கண ஆராய்ச்சியோ சொற்பொருள் ஆராய்ச்சியோ மேற்கொள்கின்றவர் காவியத்தின் சொற்களிலும் சொற்களின் பொருள்களிலுமே மூழ்கியிருக்கலாம். | ஆனால், காவியத்தைக் கலைநோக்கோடு கற்கின்றவர்கள் இந்த இருநிலையும் கடந்து அப்பால் உயர்ந்து நிற்க வேண்டும். குழந்தையின் தாய் காணும் அழகைக் கலைஞனும் கண்டு களிப்பதுபோல, காவியத்தை உலகிற்கு | | |
|
|