| நீர்வார் நிகர்மலர் கடுப்ப ஓமறந்து அறுகுளம் நிறைக்குந போல அல்கலும் அழுதல் மேவல ஆகிப் பழிதீர் கண்ணும்...1 இவ்வாறு கூறுமிடத்தும், உள்ளம் விழைந்தவாறு கற்பனை அமைந்த போதிலும், அது சிறப்பெய்தவில்லை. இத்தகைய உயர்வுநவிற்சியாக வருவனவற்றை, உண்மை என்னும் உள்ளீடு இல்லாக் காரணத்தால், வெறுங் கற்பனை (fancy) என வேறுபடுத்துவர் அறிஞர்.2 வெறுங்கற்பனை ஆயினும், வெறுங் கற்பனை என்பது சுவையற்றதும் அன்று; கற்பனைக்கு முரணானதும் அன்று. அதிலிருந்து சிறிது வேறுபட்டது, சிறிது மிகையானது எனலாம். அந்த வேறுபாடும் மனக்கண் காணும் காட்சியால் ஏற்பட்டது அன்று; மனம் உணரும் உணர்ச்சியின் தன்மையால் ஏற்பட்டது எனல் வேண்டும்.3 புலவரின் உணர்ச்சி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் அமையும்போது, ஆழ்ந்த பண்புகள் அற்ற, நிலையற்ற வெறுங் கற்பனைகள் தோன்றும் புலவரின் உணர்ச்சி ஆழமுடையதாகவும் 1. அக 11 2. If the emotional nature be somehow flawed- tending to extravagance and sentimentality, the imagination tends to run into fancy and loses its basis in truth.- C.T.Winchestor,Some Principles of Literary Criticism. p.145 Creative imagination spontaneouslyy selects among the elements given by experience and combines them into new wholes. If this combination be arbitrary or irrational, the faculty is called Fancy. - Ibid p.123-124. Poetry, though no copy of reality, should not be mere fancy, but should refer to an interpret, that reality. - A.C.Bradley, Oxford Lectures on Poetry
3. Fancy is nothing but a degree of imagination; and the degree of it concerns, not the quality of the imagery, but the quality and force of the emotion smbolized by the imagery. - L.Abercrobie, The Idea of Great Poetry, p.58. |