பக்கம் எண் :

15

Untitled Document
1. அறிவியலும் கலையும்

     ஒரு மரத்தை    பார்த்து   இது நாற்பதடி உயரம் உள்ளது
என்பது அறிவியல்; இது வானளாவி உயர்ந்தது என்பது கலை.

     ஒரு கூட்டத்தைப் பார்த்து,  இது ஏறக்குறைய நாற்பதாயிரம்
மக்களைக்    கொண்டது   என்பது   அறிவியல்; எள்விழ இடம்
இல்லாமல் கூடிய கூட்டம் என்பது கலை.

     தொட்டவுடன்   சுருங்கும்   இலைகளை    உடைய  ஒரு
செடியைத்   'தொட்டாற் சுருங்கி'   என்று   குறிப்பது அறிவியல்;
'என்னைத்   தொடாதே'     (Touch me not)     என்று அது
கூறுவதாகக் கற்பனை செய்வது கலை.

      'விண்ணை இடிக்கும் தலை இமயம்' *என்பது கலை. விண்
என்று   ஒன்று   இல்லை  என்றும், இமயமலைச் சிகரம் எதுவும்
அந்த விண்ணைத்தாக்கி   இடிப்பதும்   இல்லை என்றும் இருபத்
தொன்பதாயிரத்து   நூற்று   நாற்பத்தோரடி   உயரம் உடையது
என்றும் அறிவது அறிவியல்.

     'ஆங்கிலக் கல்வியால்   எள்ளளவும்  நன்மை கண்டிலேன்;
இது   உண்மை   என்று  நாற்பதினாயிரம்  கோயிலில் எடுத்துச்
சொல்வேன்'   என்று   உணர்ந்து   பாடுவது கலை1"ஆங்கிலக்
கல்வியால் பயன் குறைவு; தாய் மொழியின் வாயிலாக நம் நாட்டு


     * பாரதியார் பாடல்கள், செந்தமிழ் நாடு.

           1.செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது
             தீதெ னக்குப்பல் லாயிரம் சேர்ந்தன
           நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
             நாற்ப தாயிரம் கோயிலில் சொல்லுவேன்.
         -பாரதியார் பாடல்கள், சுயசரிதை, கனவு,29.