ஐவகை பின்வரும் ஐந்து வகையாக அமைந்த உணர்ச்சிகளை உடைய இலக்கியம் நெடிது வாழும் என வின்செஸ்டர் கருதுகிறார்:- * 1. நியாயமான, தக்க உணர்ச்சி; நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமைவது. 2. ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டியது, ஆழம் உடையது. 3. தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உணர்ச்சி: பொருந் தாததும் வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து கொண்டுவரப்படாமல் இயல்பாக அமைவது.
4. வாழ்க்கையின் பல கோணங்களை விளக்குமாறு பலவகை உணர்ச்சிகள் கூடி அமைதல்.
5. மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் காரண மாகவோ, புலனின்பம். காரணமாகவோ, அமையும் உணர்ச்சி களைவிட உயர்வுடையதாய், நீதியின் காரணமாகவோ அறத் தின் காரணமாகவோ அமைதல்.
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை.... -புறநானூறு, -7.
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல் வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்; தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து.. -புறநானூறு, -15. * C.T. Winchestor Some Principles of Literary Criticism, p.52. |