| மனக் கண்ணால் அவன் அந்தக் கற்பனைக் காட்சியைக் கண்டு உள்ளம் உருகிக் கண்ணீர் வடிப்பான். ஆகவே உண்மையான துன்பம் வந்து தாக்குவதால் மற்றவர்கள் கண்ணீர் வடிக்க, கலை மனம் உடையவன் கற்பனைத் துன்பத்தாலும் கண்ணீர் வடிக்கின்றான்.  விலங்குநிலை துன்பம் > தன் உடல் > தன் கண்ணீர் மனித நிலை
துன்பம் > தன் உடல் > தன் கண்ணீர் துன்பம்-> பிறர் தன் உடல் > பிறர் கண்ணீர் தன் கண்ணீர் கலை நிலை
கண்ணீர் > துன்ப உணர்ச்சி > கலைஞர் கற்பனை > கலை வடிவம் > கற்பவரின் கற்பனை > கற்பவரின் துன்ப உணர்ச்சி > கண்ணீர். துன்பத்திற்கு விளக்கமாகக் காட்டிய இதுவே இன்பத்திற்கும் பொருந்துவது ஆகும். கலைத் துறையில் கலைஞனின் உணர்ச்சி அவன் உள்ளத்தில் கற்பனையை எழுப்ப, அது கலைவடிவம் பெறுகிறது. அந்தக் கலைவடிவம் கற்பவரின் உள்ளத்தில் அதே கற்பனையை அமைத்து உணர்ச்சியை விளைவிக்கின்றது.இவ்வாறு
|