ஆரியப் பூசகர் முருகனை மகனாகவும் சிவனைத் தந்தையாகவும் இருவரையும் ஆரியத் தெய்வங்களாகவும் காட்டி, பல தொன்மங்களையும் (புராணங்களையும்) தீட்டி விட்டனர். இதனால் அத் தெய்வங்களின் உருவத் தோற்றமும் வழிபாட்டுமுறையும் மிக மாறிவிட்டன. |
சேய் என்னுஞ் சொல்லிற்கு முருகன் குழந்தை, என்று இருபொரு ளிருப்பதும், இளைஞனைக் குறிக்கும் குமரன் என்னுஞ் சொல் வடமொழியில் குமார என்று திரிந்து மகனைக் குறிப்பதும், தொன்மிகர்க்குத் (புராணிகர்க்குத்) துணையாயின. |
4. சேயோனுக்கும் சிவனுக்குமுள்ள ஒற்றுமை:- |
சிவனுஞ் சிவையும் பெற்றோர் போன்றும், முருகனும் வள்ளியும் மகனும் மருமகளும் போன்றும், தோற்றமளிப்பினும், முருக வழிபாட்டில் தனிப்பற்றுள்ளவர், முருகனுஞ் சிவனும் ஒன்றேயென்று கொள்ளற்கேற்ற ஒற்றுமைச் சான்றுகளையுங் கண்டுள்ளனர். |
| (1) | இருவருக்கும் நெருப்புப் பூத அடிப்படையில், சேயோன் என்றும் சிவன் அல்லது செய்யவன் (செய்யோன்) என்றும் பெயர் தோன்றியுள்ளமை. இதனால் சிவாயநம என்பது முருகனுக்கும் ஏற்கும். |
| (2) | இருவருக்கும் மலைக்கோயில்கள் சிறப்பிருக்கையா யிருக்கை. |
| (3) | இருவர் ஊர்திகளும் படைக்கலங்களும் மலரணிகளும் குறிஞ்சி நிலத்திற் குரியனவாயிருத்தல். |
| (4) | இருவர்க்கும் முகங் கண் கைகள் முப்பதாய் முடிகை. |
| (5) | முருகனும் வீடளிப்பவனாகத் திருமுருகாற்றுப்படை கூறல். |
| (6) | இருவரையும் நான்முக திருமாலர்க்கு மேலவராகக் கதைகள் விளம்பல். |
| (7) | சிவனியக் கொண்முடியும் (சித்தாந்தமும்) மெய்ப் பொருட் கோவையும் முருகனுக்கும் ஏற்றல். |
| (8) | இருவரும் அகத்தியற்குத் தமிழாசிரியராகச் சொல்லப்படுதல். |
| (9) | வள்ளி குறிஞ்சி நிலத் தேவியாதலால், மலைமகள் என்னும் பெயர் அவளுக்கும் பொருந்தும். மலைமகள் = மலைத்தேவி. |
| (10) | முல்லை நிலத்து மாயோன் என்னும் வணக்கநிலைத் தெய்வம் மதநிலைத் தெய்வமாக (பெருந்தேவனாக) மாறியபோது, முருகனுஞ் சிவனும் போன்றே வேறுபாடு ஏற்படவில்லை. |
5. முருகன் கவர்ச்சி: |
இயற்கை வளஞ் சிறந்த குறிஞ்சி நிலத்தில், இளமையும் அழகும் இணைந்த முருகனும் வள்ளியும், அரசருங் காண விரும்பும் அழகிய |