| "மாவும் மாக்களும் ஐயறி வினவே" | (1531) |
| "மக்கள் தாமே ஆறறி வுயிரே" | (1532) |
என்று, ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு அல்லது பண்பாடு உள்ளவரை மக்கள் என்றும் அஃதில்லாதவரை மாக்கள் என்றும், மாந்தரை இரு வகுப்பினராகத் தொல்காப்பியர் வகுத்தவாறே, |
| "விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்", | (410) |
| "அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்", | (997) |
| "மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்" | (1071) |
என்னுங் குறள்களிற் பண்பட்ட மாந்தரை மக்கள் என்றும், |
| "கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து", | (329) |
| "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென்" | (420) |
என்னுங் குறள்களிற் பண்படா மாந்தரை மாக்கள் என்றும், கூறியிருத்தலுங் காண்க. |
2. | "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை" | (53) |
என்னுங் குறளிலுள்ள 'ஆனால்' என்னுஞ் சொல்வடிவம் தொல்காப்பியர் கால நடைக்கு ஏற்காமை. 'ஆயின்' என்பதே அற்றைக்கேற்ற வடிவமாம். |
3. | "ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல" | (510) |
என்னுந் தொல்காப்பிய நெறியீடு, கடைக்கழகச் செய்யுளிற் போன்றே திருக்குறளிலுங் கைக்கொள்ளப் பெறாமை. |
எ-டு: |
| "உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... அங்காற் கள்ளியங் காடிறந் தோரே" | (குறுந். 16) |
| "சென்றோர் மன்றநங் காதலர் என்றும்" | (நற். 226) |
| "முந்துவந் தனர்நங் காத லோரே." | (ஐங். 223) |
| "சொல்வரைத் தங்கினர் காத லோரே" | (கலித். 2) |