பக்கம் எண் :

திருவள்ளுவர் காலம்149

 

"மாவும் மாக்களும் ஐயறி வினவே"

(1531)

 

"மக்கள் தாமே ஆறறி வுயிரே"

(1532)

என்று, ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு அல்லது பண்பாடு உள்ளவரை மக்கள் என்றும் அஃதில்லாதவரை மாக்கள் என்றும், மாந்தரை இரு வகுப்பினராகத் தொல்காப்பியர் வகுத்தவாறே,    

 

"விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்",

(410)

 

"அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்",

(997)

 

"மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்"

(1071)

என்னுங் குறள்களிற் பண்பட்ட மாந்தரை மக்கள் என்றும்,    

 

"கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து",

(329)

 

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்"

(420)

என்னுங் குறள்களிற் பண்படா மாந்தரை மாக்கள் என்றும், கூறியிருத்தலுங் காண்க.

2.

"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை"

(53)

என்னுங் குறளிலுள்ள 'ஆனால்' என்னுஞ் சொல்வடிவம் தொல்காப்பியர் கால நடைக்கு ஏற்காமை. 'ஆயின்' என்பதே அற்றைக்கேற்ற வடிவமாம்.

3.

"ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல"

(510)

என்னுந் தொல்காப்பிய நெறியீடு, கடைக்கழகச் செய்யுளிற் போன்றே திருக்குறளிலுங் கைக்கொள்ளப் பெறாமை.
     எ-டு:

 

"உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
அங்காற் கள்ளியங் காடிறந் தோரே"

(குறுந். 16)

 

"சென்றோர் மன்றநங் காதலர் என்றும்"

(நற். 226)

 

"முந்துவந் தனர்நங் காத லோரே."

(ஐங். 223)

 

"சொல்வரைத் தங்கினர் காத லோரே"

(கலித். 2)