பக்கம் எண் :

150தமிழியற் கட்டுரைகள்

 

"மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே."

(அகம். 211)

     இங்ஙனமே, 

 

"நெருநற்றுச் சென்றார்எங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து"

(1278)

என்று குறளிலும் உலகவழக்கிற்குரிய உயர்வுப் பன்மை வந்திருத்தல் காண்க.

4.

"எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே",

(1008)

 

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்",

(1336)

 

"வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே" 

(1582)

என்று தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்ட முழுநிறைவான மூவேந்தர் தலைமை,

 

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு"

(735)

என்று குறைவுறக் குறிக்கப்பட்டமை,

5.

"தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்"

(256)

என்னுங் குறள் புத்தமதக் கொள்கையைக் கண்டிப்பதாயிருத்தல்.

     புத்தர் காலம் கி. மு. 6ஆம் நூற்றாண்டு. புத்த மதம் உலகிற் பரப்பப் பட்ட காலம் கி. மு. 273-236. அசோகன் மகன் (அல்லது உடன்பிறந்தான்) நால்வருடன் இலங்கை சென்று அங்குப் புத்த மதத்தைப் பரப்பிய காலம் கி. மு. 247-07. அதன் பின்னரே அம் மதம் தமிழகத்திற் புகுந்திருத்தல் வேண்டும்.
     6. 'மலர்மிசை யேகினான்' ('பூமேல் நடந்தான்'), 'பொறிவாயி லைந் தவித்தான்' முதலிய அருகன் பெயர்கள், கடவுட் பெயர்களாகத் திருக்குறள் முதலதிகாரத்தில் ஆளப்பட்டுள்ளமை,
     புத்த மதத்தின் பின்னரே ஆருகதம் தமிழகம் வந்ததாகத் தெரிகின்றது.
     திருவள்ளுவர் காலம் கடைக்கழக முடிவிற்கு முந்தியதென்பதற்குச் சான்றுகள்: