பக்கம் எண் :

32தமிழியற் கட்டுரைகள்

     அத்துணைச் சிறந்ததன்று. ஆயினும், அதுவும் தொல்காப்பியத்திற் காணப்பெறவில்லை.
     கிறு கின்று ஆநின்று என நிகழ்கால இடைநிலை மூன்றென்பார் நன்னூலார். இவற்றுள் கிறு என்பது கின்று என்பதன் தொகுத்தலே. இவற்றை இரண்டாகக் கொள்ளினும், மூன்றாகக் கொள்ளினும், இழுக்கன்றாம், ஆயின் இவற்றுள் ஒன்றைக் கூடத் தொல்காப்பியர் தனியாகவோ வினைச்சொல்லில் வைத்தோ குறியாதது மிகவும் வியத்தற்குரியதே.
     இனி, நிகழ்கால வினைபற்றிய தொல்காப்பிய நூற்பாக்களும், அவற்றிற்குச் சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டும், வருமாறு :-
     "நிகழுஉ நின்ற பலர்வரை கிளவியின்
உயர்திணை யொருமை தோன்றலு முரித்தே
அன்ன மரபின் வினைவயி னான"

(தொல். பெயரியல் 3.19)

     எ-கா :
     சாத்தன் யாழெழுஉம், சாத்தி சாந்தரைக்கும்,
     "பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா"

(தொல். வினை. 30)

     (இதற்கு எடுத்துக்காட்டு நூற்பாவிலேயே உள்ளது)
     "நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட
அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே."

(தொல். வினை. 37)

  எ-கா : வாழுமில், கற்குநூல், துயிலுங்காலம், வனையுங்கோல், ஓதும் பார்ப்பான், உண்ணுமூண்...... (புக்கவில், உண்ட சோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு)
  "அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி
முதற்கண் வரைந்த மூவிற்று முரித்தே"

(தொல். வினை. 38)

     (இதற்கும் எடுத்துக்காட்டு நூற்பாவிலேயே உள்ளது)
  "முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை
எம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்"

(தொல். வினை. 43)

     எ-கா :
     "மலைநிற்குந் ஞாயிறியங்கும், திங்களியங்கும்" எனவும் "தவங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரிதருந் தண்கடல் வையத்து" எனவும் வரும்