| "இயல்பா குநவும் உறழா குநவும்" | (9) |
| "இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும்." | (16) |
| "வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும்" | (17) |
(2) குற்றியலுகரப் புணரியல். |
| "கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கில் மருவொடு திரிநவும்" | (78) |
சொல்லதிகாரம் : (1) இடையியல். |
| "புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும் வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி ஆகி வருநவும் தத்தம் குறிப்பிற் பொருள்செய் குநவும் ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும்" | (2) |
(2) எச்சவியல் |
| "பெயர் நிலைக் கிளவியின் ஆஅ குநவும் திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும் தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும் மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்" | (53) |
பொருளதிகாரம் : பொருளியல் |
| "அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்" | (37) |
இஃதேல், தொல்காப்பியர் தம் நூலுள் தாம் கூறியதையே ஏன் ஆராய்ந்திலர் எனின். |
| "தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று" | (100) |
என அவர் செய்யுளியலில் தாம் கூறியதையும் நோக்காதே. |
| "ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகர மாகும்" | (தொல். 445) |
எனக் குற்றியலுகரப் புணரியலிற் கூறியதுபோன்றே எனக் கூறி விடுக்க (தொண்டு 9. தொண்டு + பத்து = தொண்பது (90). தொன்பது - ஒன்பது. தொண்டு + நூறு = தொண்ணூறு (900). தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் (9000). |