பக்கம் எண் :

கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள் - தமிழ் வேற்றுமையமைப்பு43

     வகையால் நீங்கற் பொருளும் இருத்தல் காண்க. இங்ஙனம் 5ஆம் வேற்றுமைப் பொருள்களெல்லாம் நீக்கப் பொருளேயாதல் நோக்கித்தெளிக.

     ஏனை வேற்றுமைகளெல்லாம் ஒவ்வொரு பொருளே கொண்டன வென்பது எல்லார்க்கும் தெளிவாம்.

     (5) "இதுபோதுள்ள தமிழிலக்கண நூல்களுள் முதலதான தொல்காப்பியம்,"
     அவைதாம்,
     பெயர் ஐ ஒடு கு
     இன் அது கண்விளி என்னும் ஈற்ற"

(548)

என வேற்றுமைகளைப் பொருள்பற்றி வரிசைப்படுத்தி உருபுபற்றிப் பெயரிட்டழைக்கின்றது.
      இனி
  "அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே"

(தொல்,549)

  "இரண்டா குவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

(தொல், 555)

  "முன்றா குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி

(தொல், 557)

  "நான்கா குவதே
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

(தொல், 559)

  "ஐந்தா குவதே
இன்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

(தொல், 561)

  "ஆறா குவதே
அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

(தொல், 563)

  "ஏழா குவதே
கண்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

(தொல், 565)

  "விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய என்ப"

(தொல், 603)

எனப் பிற்பட்ட நூற்பாக்களிலும் முற்கூறிய முறையையே முதன்மையாகக் கையாளுதல் காண்க. நன்னூலாரும் தொல்காப்பியரை அடியொற்றியே வேற்றுமைகளைப் பெயரிட்டழைக்கின்றார்.

     எழுவாய் எனினும் பெயர் எனினும் ஒக்கும்.
     இங்ஙனம் பொருளை அடிப்படையாகக் கொண்டு உருபுபற்றி வேற்றுமைகளை வரிசைப்படுத்திக் கூறும்போதே, எண் முறை பற்றிப் பெயரிட்டாளுதற்கும் தோற்றுவாய் செய்துள்ளது தொல்காப்பியம் அல்லது