11 ஆய்தம் |
ஆய்த எழுத்துவகைமை |
| 'எழுத்தெனப்படுப அகர முதல னகர விறுவாய் முப்பஃதென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே' | |
| 'அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன' | (தொல். நூன்மரபு. 1, 2) |
என்னும் தொல்காப்பிய நூற்பாக்களால் முதலெழுத்து முப்பதென்பதும், சார்பெழுத்து மூன்றென்பதும், இவற்றுள் முன்னையவே சிறந்தன வென்பதும் பெறப்படும். |
"முன்னின்ற சூத்திரத்தாற் சார்ந்து வரன் மரபின் மூன்றலங்கடையே எழுத்தெனப்படுப முப்பஃதென்ப எனவே, சார்ந்துவரன் மரபின் மூன்றுமே சிறந்தன; ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்திலவெனவும் பொருடந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கு மென்றற்கு, எழுத்தோரன்ன என்றார்" என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. |
இனி, "இப் பெயர்களே பெயர். இம் முறையே முறை; தொகையும் மூன்றே" என்று நச்சினார்க்கினியர் தேற்றேகாரமிட்டுக் கூறுவதாலும், நன்னூலார் சார்பெனக் கூறிய பத்து எழுத்துக்களுள் ஏனைய வேழும் தொல்காப்பியர் காலத்திலும் இருந்தமையாலும், தொல்காப்பியர்க்கும் நச்சினார்க்கினியர்க்கும் நன்னூலார் கொள்கை யிருந்ததில்லை யென்பது தெளிவாம். |
ஆய்தப்பெயரும் ஒலியும் |
தொல்காப்பியர் ஆய்தத்தைக் குறிக்கும்போதே முப்பாற்புள்ளி என அதற்கு மற்றுமொரு பெயர் கொடுத்தார். பிற்காலத்தாசிரியர் வேறுஞ் சில பெயரிட்டு வழங்கினர். "ஆய்தம் என்பது அஃகேனம். அஃகேன |