"லளஃகான்" (நூன்மரபு.24) "ணனஃகான்" (க்ஷ.26) எனத் தொல் காப்பியத்தில் வந்திருப்பவை உம்மைத் தொடர்களாதலின், குறிலிணைக்கீழ் வந்தனவாகா. ஆயின், "இளஃகுமே" எனச் சிந்தாமணியில் (149) வந்திருப்பது விதிக்கு மாறாதலின், இதனையும் ஒற்றில் வழியொற் றெனவே கொள்ளல் வேண்டும். | ஆய்தம் தோன்றும் வகை | லகரத்திரிபு, வகரத்திரிபு, ளகரத்திரிபு, ஒற்றில் வழியொற்று, சாரியைப் புணர்ப்பு என ஆய்தம் தோன்றும் வகை ஐந்தாம். | | 'தகரம் வருவழி யாய்த நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே' | (புள்ளிமயங்கியல் 74) | என்பது லகரத்திரிபு. கஃறீது, கற்றீது என்பன எடுத்துக்காட்டு. இவை உறழ்ச்சி. அஃறிணை பஃறுளி என்பன உறழ்ச்சியில்லாதன. | | 'வேற்றுமை யல்வழி யாய்த மாகும்' | (புள்ளிமயங்கியல் 84) | என்பது வகரத்திரிபு. "அஃகடிய, இஃகடிய, உஃகடிய, சிறிய, தீய, பெரிய" என்பன எடுத்துக்காட்டு. | | 'ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான' | (புள்ளிமயங்கியல் 104) | என்பது ளகரத்திரிபு. முஃடீது, முட்டீது என்பன எடுத்துக்காட்டு. இவை உறழ்ச்சி. | ஒற்றில் வழியொற்று முன்னர்க் காட்டப்பெற்றது. | அஃகான், மஃகான், வஃகான் என்பன சாரியைப் புணர்ப்பு. | 'அஃது' என்பதன் குறுக்கமே 'அது' எனத் தெரிதலின், 'செய்வஃது' என்பது 'செய்வது' என்பதன் விரித்தல் திரிபெனக் கொள்வது சரியன்று. | வகரத்திரிபும் சாரியைப் புணர்ப்பும் ஒத்தியலமைவு (assimilation) என்னும் நெறிமுறை பற்றியன. | ஆய்தம் வரும் தனிச்சொற்கள் | ஆய்தச் சார்பையும் ஆய்தந் தோன்றும் வகையையும் துணைக் கொண்டு ஆய்தம் வரும் தனிச்சொற்களை ஆய்ந்து பார்ப்பின், அவற்றுட் பெரும்பாலான லகர ளகரத் திரிபாகவே போதரும். இத் திரிபு குமரிநாட்டின் ஒரு மருங்கு தோன்றியிருக்கலாம். | எ-கா: | அஃகு | அல்குதல் = சுருங்குதல், குன்றுதல், நுணுகுதல். | அல்கு - அஃகு. | | |
|
|