ஒன் என்பதும் ஒன்று என்பதும் ஒல் என்னும் ஒரே அடிப் பிறந்த சொற்களாம். | ஒ - ஒல், ஒத்தல் = பொருந்துதல். ஒல்லுதல் = பொருந்துதல். ஒல்-ஒன். ஒ.நோ : வெல் - வென். ஒல் + து = ஒன்று, ஒ.நோ: நல் + து = நன்று. ஒன்னுதல் = பொருந்துதல், ஒன்னார் = பொருந்தார், பகைவர். ஒல்-ஒள்-ஒண். ஒண்ணுதல் = பொருந்துதல். ஒண் + து = ஒட்டு, ஒண்டு. | உம் என்பது கூடுதல் பொருள் கொண்டிருப்பதை, 'அழகனும் முருகனும்,' 'வந்து போயும்' என்னும் எண்ணும்மைத் தொடர்களால் உணர்க. | பல உகர முதற் சொற்கள் அகர முதலவாகத் திரியும். எடு: முடங்கு -மடங்கு, குடும்பு - கடும்பு, குடம் -கடம். இங்ஙனமே உம் என்பதும் அம் எனத் திரிந்து வெவ்வேறு சொற்களைப் பிறப்பிக்கும். | அம் - அமல், அமலுதல் = நெருங்குதல். அமல் = நிறைவு, அமலை = திரளை. அமைதல் = நெருங்குதல், அமைவு = நிறைவு, அமல் -அமர், அமர்தல் = நெருங்குதல். | பிற்காலத்தில் படர்க்கைப் பன்மை யீறுகளாக எழுந்த, ஆர், கள் என்னும் சொற்களும் கூடுதல் பொருள் குறித்தனவாகவே யிருத்தல் காண்க. | ஆர்தல் = பொருந்துதல், நிறைதல். அர் என்பது ஆர் என்பதன் குறுக்கம். | கள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல், கள்ள = ஒக்க, போல. 'கள்ள' என்பது ஓர் உவமையுருபு. | | 'கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅ" | (தொல். உவ.11) | கள் + அம் = களம் = கூட்டம், கூடுமிடம். | சில மகர மெய்யீற்று அஃறிணைப் பெயர்கள் னகர மெய்யீறாகத் திரியும். இது ஒருவகைப் போலியாம். இதை, | | "மகரத் தொடர் மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகரறக் கிளந்த வஃறிணை மேன" | (மொழி.49) | என எதிர்மறை வகையில் தொல்காப்பியரும் | | "மகர விறுதி யஃறிணைப் பெயரின் னகரமோ டுறழா நடப்பன வுளவே." | (எழுத். 122) | என உடன்பாட்டு வகையில் நன்னூலாரும் எடுத்துக் கூறினர். | தொல்காப்பிய நூற்பாவிற்கு, | உதாரணம்: எகின் செகின் விழன் பயின், குயின், அழன் புழன், கடான் வயான், எனவரும்..... நிலம் நிலன், பிலம் பிலன், கலம் கலன், வலம் வலன், | | |
|
|