பாயிரப் பெயர்கள் |
பாயிரம் என்பது முகவுரை. அது ஒரு நூற்கு இன்றியமையாத தென்பது, "எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க" என்பது இலக்கணம். என்னை? |
"ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே" | |
(நன். 54) |
என்றாராதலின் "பாயிரமென்றது புறவுரையை, நூல் கேட்கின்றான் புறவுரை கேட்கின் கொழுச் சென்ற வழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோல அந் நூல் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை? |
பருப் பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்! | |
என்றாராகலின் "அப் பாயிரந்தான் தலையமைந்த யானைக்கு வினை யமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்க மாகிய திங்களும் ஞாயிறும் போலவும், நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றா யிருத்தலின்; அது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇப் போலவும் குறிச்சி புக்க மான் போலவும், மாணாக்கன் இடர்ப்படும் என்க" என்னும் நச்சினார்க் கினியர் உரையான் உணரப்படும். பவணந்தியார். |
மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன் ஐதுரையா நின்ற வணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது." | |
(நன். 55) |
எனச் சில உவமை வாயிலாகவும் பாயிரத்தின் தேவையை வற்புறுத்தினார். அப் பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து என்றார் நச்சினார்க்கினியர். அதையே, |
"பாயிரம் பொது சிறப்பெனவிரு பாற்றே" |
(நன். 2) |
என நூற்பா யாத்தார் பவணந்தியார். அவற்றுட் பொதுப்பாயிரம் எல்லா நூன் முகத்தும் உரைக்கப்படும். அதுதான் நான்கு வகைத்து. |