பக்கம் எண் :

திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்69

     சிமிழ்த்தல் = வலையுள் அகப்படுத்துதல்.

     "தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று"

(274)

     மாடு = செல்வம்.
     இது ஒரு பழைய பொற்காசைக் குறித்த மாடை என்னும் சொல்லின் திரிபாகக் கருதப்படுகின்றது. மாழை = பொன், பொற்கட்டி. மாழை-மாடை-மாஷ (வட சொல்).
     பண்டைக் காலத்தில் உலகமெங்கும் கால்நடையே செல்வமாகக் கருதப்பட்டதினால், மாடு என்னும் விலங்குப் பெயரே செல்வம் என்னும் பொருளைத் தழுவிற்றென்று கொள்வதே மிகப் பொருத்தமாம்.
     ஒ.நோ :
     இலத்தீன் (L): pecu (=cattle)-pecunia (=money)-
     ஆங்கிலம் (E): pecuniary=consisting of money.
     L. caput (=head)-capitalis-E. capital-cattle-chattel=movalle possessions.
     "கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை."

(400)

     மையாத்தல் = மயங்குதல்.
     "மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று"

(1112)

     நாகரிகம் = பண்பாடு.
     இச் சொல்லை இப் பொருளிலேயே திருவள்ளுவர் ஆண்டிருக் கின்றார். கண்ணோட்டம் ஒரு பண்பாட்டியல் யென்பதை யறிக. நாகரிகம் என்னுஞ் சொற்குக் கண்ணோட்டம் என்பது நேர்ப்பொருளன்று.

- திருவள்ளுவர் நினைவு மலர்