2. அருந்தொடர் மொழிகள்: |
| தேவர் சொல்லாட்சித் திறனில் மிக விஞ்சியவராதலின், வேண்டியவா றெல்லாம் விழுமிய தொடர்மொழிகளைப் புனைந்து கொள்கின்றார்: எ-டு : கட்டழலெவ்வம்-இணரெரி தோய்வன்ன இன்னா. பொன் வண்ணப்புழுக்கல்-பருப்புச்சோறு. நாண் மெய்க்கொண்டீட்டப்பட்டார்-நாணமே வடிவாய பெண்டிர். |
(2) பொருட்டிறம்: |
1. கலைகள்: |
| "நீர்நின் றிளகிற் றிதுவேண்டா; நீரின் வந்த திதுபோக; வார்நின் றிளகு முலையினாய்! வாட்புண் ணுற்ற திதுநடக்க; ஓரு முருமே றிதுவுண்ட தொழிக; ஒண்பொ னுகுகொடியே! சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விது," | (718) |
என்றான். |
இது இசை பற்றியது. இங்ஙனமே, யாழ் மரத்தின் ஏனைக் குற்றங் களும், நரப்புக்குற்றங்களும், யாழுறுப்புகளும், யாழ்வகைகளும், பாடும் முறையும் காந்தருவதத்தையா ரிலம்பகத்தில் கலைமுறைப்படி கூறப்பட் டுள்ளன. |
| "தோற்பொலி முழவும் யாழும் துளைபயில் குழலு மேங்கக் காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட் டொல்கித் தோற்றினாள் முகஞ்செய் கோலம் துளக்கினாள் மனத்தை யெல்லாம்." | (675) |
இது கூத்துப்பற்றியது. |
| "பொழிந்துநஞ் சுகுத்த லச்சம் இரைபெரு வெகுளி போகம் கழிந்துமீ தாடல் காலம் பிழைப்பென வெட்டி னாகும்; பிழிந்துயி ருண்ணுந் தட்டம் அதட்டமாம் பிளிற்றி னும்பர் ஒழிந்தெயி றூனஞ் செய்யுங் கோளென மற்றுஞ் சொன்னான்." | (1286) |
இது (நச்சு) மருத்துவம் பற்றியது. இதற்கடுத்த இரு செய்யுட்களும் இதுவே. |
| "ஒள்ளிலைச் சூலந் தெண்ணீ ருலாமுகிற் கிழிக்கு மாட" | 2527 |
| "சூல நெற்றிய கோபுரத் தோற்றமும்" | 3003 |
| "பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக் கன்னிமூ தெயில்" | 1250 |
இவை சிற்பம் பற்றியன. சூலம் - இடி தாங்கி. |