| "தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை மேவர் தென்தமிழ் மெய்ப்பொரு ளாதலின் கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள் 'பூவர் சோலை புகுவல்,' என் றெண்ணினாள்." | (1328) |
| "காதலாற் காம பூமிக் கதிரொளி யவரு மொத்தார் மாதருங் களிற னானு மாசுண மகிழ்ச்சி மன்றல் ஆதரம் பெருகு கின்ற வன்பினா லன்ன மொத்தும் தீதிலார் திளைப்பி னாமான் செல்வமே பெரிது மொத்தார்." | (189) |
| "மெய்வகை தெரிதல் ஞானம்; விளங்கிய பொருள்க டம்மைப் பொய்வகை யின்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி உய்வகை யுயிரைத் தேயா தொழுகுத லொழுக்கம்; மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும்,' என்றான்." | (1436) |
இது வீடு. முத்தியிலம்பகத்தில் வீடுபேற்றைப்பற்றி ஆருகத முறையில் மிக விரிவாகக் கூறுகின்றார் தேவர். |
அறவழியிற் பொருளீட்டி அதனைக்கொண்டு அறவழியில் இன்பந் துய்க்கவேண்டு மென்னும் திருவள்ளுவத்தேவர் கொள்கையே, திருத்தக்க தேவர் கொள்கையுமாம். ஆயின், இல்லறத்தாலும் வீடுபேறுண் டென்பது பின்னவர்க்கு உடம்பாடன்று. அஃது அவர் மனப்பான்மையும் மதமும் பற்றியது. |
சிந்தாமணி, சிலப்பதிகாரம் போல உள்ளோன் தலைவனாக உள்ளதும் இல்லதும் புணர்க்காது, இல்லோன் தலைவனாக இல்லதும் உள்ளதும் புணர்த்தலின், அதன்கண் வரலாற்றுச் சான்றுகள் காணக்கூட வில்லை. ஆயினும், தேவர் காலத்துத் தமிழ்நாட்டு நாகரிகத்தை அறிவதற்குத் துணையான பல செய்திகள், நூல் நெடுமையுங் கூறப்பட்டுள. |
(3) யாப்புத்திறம்: |
| "வெஞ்சின வெகுளியிற் குஞ்சர முழங்கலின் மஞ்சுதம் வயிறழிந் தஞ்சிநீ ருகுத்தவே." | (570) |
இது வஞ்சித்துறை. இதனைக் 'குறளடி நான்காய் வந்த கொச்சக வொருபோகு' என்பர் நச்சினார்க்கினியர். |
| "மடமா மயிலே குயிலே மழலை நடைமா ணனமே நலமார் கிளியே உடனா டுமெனை யனையென் றுருகாத் தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே." | (1526) |
இது கலி விருத்தம். |