| "என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப் புன்புறந் தோலைப் போர்த்து மயிர்ப்புறம் பொலிய வேய்ந்திட் டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான் மன்பெருந் தச்சன் நல்லன் மயங்கினார் மருள வென்றான்." | (1377) |
| "மன்னர்தம் வெகுளி வெந்தீ மணிமுகில் காண மின்னிப் பொன்மழை பொழியின் நந்தும் அன்றெனிற் புகைந்து பொங்கித் துன்னினார் தம்மை யெல்லாஞ் சுட்டிடும்." | (1117) |
| "விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி." | (435) |
இவை இனிய உருவகம், முத்தி யிலம்பகத்தில் சீவகன் வீடுபேறு ஓர் உருவக நாடகமாக வரையப்பெற்றுளது, திருப்போரும் பிரபுலிங்க லீலையும் போல. |
| "வெஞ்சின ... ... ... உகுத்தவே." | 570 |
இவை தாழிசைக் கொச்சகம். |
| "சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட ... ... ... ... .... ... .... ..... ..... ..... ...... ......... முந்திநலி கின்றமுது மூப்பொழியு மென்றான்." | 2020 |
இஃது இரட்டுறல். இதையே வில்லிபுத்தூரர் தம் பாரதத்தில் ஆள்கின்றார். |
| "காழக மூட்டப் பட்ட காரிருட் டுணியு மொப்பான் ஆழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான் வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறித லில்லான் மேழகக் குரலி னானோர் வேட்டுவன் றலைப்பட் டானே." | 1230 |
இஃது ஒரு சொல்லோவியம். |
கம்பராமாயணத்திற்போல வரம்பிறந்த உயர்வு நவிற்சிகள் சிந்தா மணியி லில்லை. பகுத்தறிவிற்குப் பொருந்துமாறு அறிஞரை இன்புறுத்தும் அரிய அழகிய அணிகளையே தேவர் ஆளுகின்றார். |
(5) சொல்லாராய்ச்சித் துணை: |
சிந்தாமணிச் சொல்லாராய்ச்சியால் அறியப்படும் சொல்லியல் உண்மைகளாவன: |
1. சொற்களின் முந்து வடிவம்: |
அரவு (அரா), நறவு (நறா), கோன் என்னுஞ் சொற்களின் முந்து வடிவம், முறையே, 'அர, நற, கோவன்' எனபன. |
இவ்விருந்தான் (இவ்விடத்திருந்தான்) என்னும் வழக்கு, சுட்டிடைச் சொற்கள் ஆதியில் பெயரும் ஈரெச்சமுமாகப் பயன்பட்டதை உணர்த்தும். |