பக்கம் எண் :

127அறிமுகம்

     முற்காலத்தவர் ஆய்வுமுறை இருவகையாய் அமைந்துள்ளன. ஒன்று: புற ஆய்வு. மற்றொன்று: அக ஆய்வு. இவ்விரு பிரிவுகளிலும் பல உட்பகுதிகள் உள்ளன:

ஆய்வு புற ஆய்வு  மூலம்
 வகை
 அமைப்பு
 மரபு
அக ஆய்வு  பொருள்
 சுவை
 அழகு
 நயம்
 குறிப்பு
 உள்ளுறை
 இறைச்சி
 வேறுபொருள்

     பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த வள்ளலாய் - கவிபாடும்
வித்தகராய் விளங்கிய பொன்னுசாமித் தேவரின் (1837-1870) கவித்திறனை,
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வியந்து பின்வருமாறு
பாடியுள்ளார்:

          சொன்னயமும் பொருள்நயமும் அணிநயமும்
             கற்பனையாச் சொல்லா நின்ற
         நன்னயமும் தொடைநயமும் வனப்புநய
             மும்பிறிது நாட்டா நிற்கும்
         எந்நயமும் சிற்சிலவே பிறர்க்கமையும்;
             நினக்கமைந்த எல்லாம் என்னில்,
         பன்னயமும் உணர்பொன்னுச் சாமிமகி
             பா ! நினது பாட்டுஎற் றாமே !

எத்தனை வகையில் நயம் நோக்கப்பட்டது என்பதை இந்தப் பாடல்
அறிவிக்கின்றது.

உரை திறனாய்வே

    புலமை நூல் என்னும் சிறந்த ஆய்வு நூலை இயற்றியுள்ள வி.நா.
மருதாசலக் கவுண்டர், பண்டைய உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்கள்
என்றும், உரைகள் யாவும் திறனாய்வு நூல்கள் என்றும் விளக்கியுள்ளார்:

     “உயர்தர நூல்களெல்லாம், அறிவென்னும் செம் பொன்னால்
ஆக்கப்பட்டு இயல்பான உரையாணியால் ஒளி வீசப்படுவன. நூலின்
மாற்றினைக் காண்பதற்கு நல்லாசிரியர்கள்