பக்கம் எண் :

உரையாசிரியர்கள்426

3-21


3-31

தீ செங்கனலி-எல்லாம் தீகின்ற செந்நெருப்பு; எல்லாம் தீதற்குக்
காரணமாகிய செந்நெருப்பு என்றவாறு.

கூந்தல் என்னும் பெயரோடு கூந்தல்-கூந்தல்மா என்று கண்டார்
சொல்லும் வடிவொடு வந்த கேசி.

     கூந்தலை உடைய மாவைக் ‘கூந்தல்’ என்றும், பெயரினை 
உடைய வடிவைப் பெயரினை உடைய வடிவைப் பெயர் என்றும்
கூறினார், ஆகுபெயரான்.

     கேசி குதிரையாய் வந்து பொருதான் ஓர் அசுரன்; இப்
பெயர் கேசம் என்னும் வடமொழி முதனிலையாக முடிந்தமையின்
அதன் பொருண்மை பற்றி, ‘கூந்தல்’ என்றார்.

3-35

7-84

17-53

13-1


8-15

20-81

வித்திடுபுலம் மேடாயிற்று-நாற்றங்கால் வண்டலிட்டு மேடாயிற்று.

பேஎ நீர் - ஆழத்தான் அச்சத்தைத் தரும் நீர்.

ஏம வைகல் - பிறவித் துன்பம் சாராத வைகல்.

மங்குல் ஞாயிறு - இருளைக் கெடுக்கும் ஞாயிறு; இதனை ‘நோய்
மருந்து’ என்றாற்போலக் கொள்க.

ஒரு நிலைப் பொய்கை - வற்றாப் பொய்கை.

நீ அன்பன் எற்கு அன்பன்-நீ சால அன்பு பூண்டவன் என்மாட்டு அன்புடையான்.

காரணம் கூறி விளக்கம்

3-77



10-11

பாழ் - புருடன். சாங்கியர் பிறிதொன்று பிறத்தற்கு இடன்
ஆகாது என்ப ஆகலான், அவர் மதம் பற்றிய புருடனைப்
‘பாழ்’ என்றார். ஈண்டுத் தத்துவம் கூறுகின்றமையின்.

ஏணிப்படுகால் - இருகோவை  முதல் முப்பத்து இருகோவை
ஈறாக ஒன்றற்கு ஒன்று வடம் ஏறுதலான் மேகலையை ‘ஏணிப்
படுகால்’ என்றார்.

10-13

11-88


13-29

மூஉய் - மூடுதல் உடைமையால் பூப்பெட்டியை ‘மூஉய்’ என்றார்.

மழபுலவர் - இளைய புலவர்: கல்வி தொடங்கின அளவாதலின் மழபுலவர் என்றார்.

அறி துயில் - யோக உறக்கம் ஆதலால் அறிதுயில் எனப்பட்டது.