பக்கம் எண் :

427ஆய்வு

19-98  படையும் பவழக் கொடி நிலம் கொள்ளும் - குருதி தோய்ந்துழி
       அல்லது அந் நிறம்

இயல்பு அன்மையின் கொள்ளும் என்றார்.

11-81   அம்பா ஆடல் என்று தைந் நீராடற்குப் பெயர் ஆயிற்று. தாயோடு
       ஆடப்படுதலின்.

2-69   வாயடை - வாயின்கண் அடுக்கப்படுதலின் உணவிற்கு வாயடை
       என்று பெயராயிற்று.

5-37   நொசிப்பு - மனத்தினை ஒன்றாக்கி நுண்ணியதாகக் காண்டலாதலின்
       சமாதி நொசிப்பு எனப்பட்டது

உலக வழக்குக் கூறல்

    மக்கள் பேச்சில் இடம்பெறும் தொடரும் சொல்லும் உரையில் எடுத்துக்காட்டுகின்றார்.

8-21    ‘எதிர்குதிர் ஆகின்று’ - எதிர்குதிர் என்பது, ஓர் உலக வழக்கு.

8-49    மாலைக்குமாலை என்றது, அடிக்கடி என்றாற்போல நின்றது.

8-60    ஈதா என்பது, ஒரு மரூஉ முடிபு; அஃது இக்காலத்து இந்தா என்று         வழங்கப்படும். சுட்டுநீண்டது.

18-6    ஏறுமாறு என்பது பகைத்தற்கு ஓர் உலக வழக்கு.

20-13   குதுகுதுப்ப-ஆசைப்பட.

சொல்லும் பொருளும்

1-44    மடங்கல்-உலகு உயிர்களினது ஒடுக்கம்.

2-27   ‘நின்னிலைத் தோன்றும்’ என்புழி ‘நிலை’ என்பது இடப்பொருட்டாய்
       நின்றது.

3-8    தருமன்-யமன்; மடங்கல்-அவன் ஏவல் செய்யும் கூற்றம்.

4-32   மருந்து - காற்று.

4-18   தாக்கு இரை - எறிந்து எடுக்கும் இரை.

5-14   சால்வ - சால்பினை உடையாய்

10-74  உறு நறவு - வெம்மை மிக்க நறவு

12-21   தேசு - செயற்கை அழகு. ஒளி - கல்வியால் வந்த நிறம்.

14-8    மணந்து தணந்தோர் - கூடிப் பிரிந்தோர்.

2-38    எதிர் கழறும் - ஒக்கும்