பக்கம் எண் :

உரையாசிரியர்கள்504

     இருகை முடவனை யானை ஏறு என்றால் அவனால் ஏறப்போகாதது
போன்று-

     ஒருவன் ஒருவனை, “உனக்கு ஒரு மாத ஜீவனத்துக்கு என்ன
வேணும்?” என்றால் தம் மனைவி மக்களையும் கூட்டிக் கொண்டு, “எனக்குக்
கலம் நெல் வேணும்”என்பது போன்று-

     தம்மால் காதலிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லும்
ஆடவர்கள் தம்மை அலங்கரித்துக்கொண்டு போமாறு போன்று-

     வேற்றரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடைய
வளைந்தானுக்குள்ளே குடிவாங்கி இருந்து, இவ்விடம் இன்னார்
பற்று, இவ்விடம் இன்னார்பற்று’ என்று பின்னும் தம் இடத்தைச்
சொல்லிவைக்குமாறு போன்று-

பயிர்த்தொழில்

     வேரிலே வெப்பந் தட்டினால் கொழுந்து முற்படி வாடுவது போன்று-

     நெற்பயிர் செய்யப் புல் தேயுமாறு போல்-

நோயும் மருந்தும்

    பசியில்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம் எனப்படுதலால்,
நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள் உணவு உண்ணலாகாது என்று
விலக்குமாறு போன்று-

     பால்குடிக்க நோய் தீருமாறு போன்று-

தண்ணீர்ப் பந்தல்

    விடாயன் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது
போன்று-

     தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று-

இராமாயணக் கதை

     மோஹித்துக் கீழே விழுந்த ஸ்ரீபரதாழ்வானைப் போன்று-

     சக்கரவர்த்தித் திருமகன் திரு அவதரித்த பின்பு வானர சாதி வீறு
பெற்றாற் போன்று-

     விபீஷணனைச் சேர்த்துக் கொண்டாற் போல-

12000 படி

     இதனை இயற்றியவர் அழகிய மணவாள சீயர். இவர் கல்வி கற்று,
உரை எழுதிய வரலாறு சுவையானது. 32 வயது வரை,