14 20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழ்ப்பணி புரிந்து மறைந்த உரையாசிரியர்கள் சிலரைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகளைத் கீழே காண்போம்: பொன்னம்பல சுவாமிகள் (1832-1904) இவர், கைவல்ய நவநீதம், வேதாந்த சூடாமணி ஆகியவற்றிற்கு உரை இயற்றியுள்ளார். திருமயிலை சண்முகம் பிள்ளை (1958-1905) இவர் கந்தபுராண வசனம் இயற்றினார். இவர் உரை கண்ட நுல்கள்: அயோத்தியா காண்டம்; பொன்வண்ணத்தந்தாதி, திருக்கைலாய ஞானஉலா, திருவாரூர் மும்மணிக் கோவை, பிச்சாடன நவமணி மாலை. சிவசம்புப் புலவர் (19830-1909) இவர் மறைசை யந்தாதி, யாப்பருங்கலக் காரிகை, கந்தபுராணம் (வள்ளியம்மை திருமணப் படலம் வரை) ஆகிய நூல்களுக்கு உரை இயற்றினார். இவர் யாழ்ப்பாணப் புலவர். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1862-1914) இவர் நற்றிணைக்கு உரை இயற்றியுள்ளார். பூவை. கலியாணசுந்தர முதலியார் (1854-1918) தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு உரையும், பட்டினத்தார் தனிப்பாடல் திரட்டு உரையும் எழுதினார். வெ. குப்புசாமி ராசு (?-1921) சிவஞானபோத உரையும், ஞானவசிட்ட உரைநடையும் இயற்றினார். |