பக்கம் எண் :

44விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     சாதி,  வருணம்,  சமயம், சாத்திரம்  என்னும்  பெயர்களால்  வலியோர்
எளியோரைக் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் ஆங்கிலேயர் இந்த நாட்டில்
புகுந்து   அரசோச்சத்   தொடங்கினர்.   அன்னார்   இந்தியாவை   ஆளத்
தொடங்கியதுமே,  சமூகக்  கொடுமைகளிலிருந்து  மக்களை  விடுவிக்க இங்கு
மங்குமாகச்  சில  சட்டங்கள்  செய்தனர். அதனால்  கவர்ச்சி  பெற்ற  சமூக
சீர்திருத்த வாதிகள், ஆங்கிலேயர்களின் அரசியல் ஆதிக்கத்தை ஆதரித்தனர்.
இராஜாராம்  மோகன்ராய்  அவர்கள்  இதற்குச் சிறந்த சான்றாவார். பிறப்பால்
அந்தணரான சாஸ்திரியார், வருணாசிரமக் கொடுமைகளை வெறுத்தவராதலால்,
அவரும் ஆங்கிலேயரின் அரசியல் ஆதிக்கத்தை ஆதரித்தார் போலும்!

     ஆங்கிலேயராட்சியை முணுமுணுப்பின்றி ஏற்றுக் கொண்ட சாஸ்திரியார்,
தமிழர்  மீது  ஆங்கிலம் பெற்றிருந்த  ஆதிக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள
மறுத்ததோடு,   எதிர்த்தும்  போராடினார்.  அதிலே,  தாம்  தனித்து  நிற்க
நேர்ந்தும் சளைத்து விடவில்லை சாஸ்திரியார்.

      வடமொழியைத்  'தேவ மொழி'  என்றனர்   அம்மொழியிடத்துப் பற்று
டையோர். அவர்களோடு போட்டியிடுவார் போல, தமிழ் மொழியையும் 'தேவ
மொழி' யென்றனர், தமிழ்ப் புலவர்களிலே சிலர். மூடநம்பிக்கைகளைச் சாடிப்
பாடிய பாரதியாரும், "ஆதிசிவன் பெற்றுவிட்டான்"என்று தமிழுக்குத் தெய்வத்
தன்மை   கற்பித்துப்  பாடினார். சாஸ்திரியாரோ , இந்த  மூட நம்பிக்கையை
மறுத்தார். வெறுத்தார், எதிர்த்தார். இதோ சான்று:

      "கருத்துக்கள்  தன்  முயற்சியாலெழும்  ஒலிகளின்  சம்பந்தமாகவே
வெளிப்படுகின்ற  இயல்பினின்றுமே  பாஷைகள்  உண்டாதலியலும் என்பது
யாவரும்  மறுக்க  முடியாததோர்  பாஷை  நூலுண்மை.  இவ்வுண்மையை
யொட்டியே   தமிழ்ப்  பாஷையின்  தோற்றமும்  ஏற்பட்டிருத்தல்  மிகவும்
கவனிக்கற்பாலதே. ஈதிவ்வாறாகத் தமிழ் நூலாசிரியர் பலரும் இக்காலத்திலும்
ஆங்கில  நூற்  பயிற்சியில்லாத  நண்பருட்  சிலரும் தமிழ் மொழியும் வட
மொழியும்  தேவ  பாஷைகள்  என்றும், இவ்விரண்டும்  முறையே அகத்தி
யனார்க்கும்   பாணிநியார்க்கும்   சிவபெருமானால்   உபதேசிக்கப்பட்டன
வென்றும் கூறுவர்."1

     சாஸ்திரியார்  ஆங்கில  மொழியிடத்து  மோகங்  கொண்டவர்களை
வெறுத்துக் கூறிய வாசகங்கள் வருமாறு:


1. 'வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்; பக். 162.