பக்கம் எண் :

264சத்திய சோதனை

Untitled Document
அடிமையாகிவிட்டேன்’  என்று   மீராபாய் பாடினாள். சமூகத்துடன்
என்னைப் பிணைத்திருந்த     அன்பெனும் நூல் இழை, என்னைப்
பொறுத்த       வரையிலும் கூட, அறுந்துவிட முடியாததாகப் பலம்
உள்ளதாகத்தான் இருந்தது.     பொதுஜன வாக்கே கடவுள் வாக்கு.
இங்கே நண்பர்களின் வாக்கு,     மனப்பூர்வமான உண்மைவாக்காக
இருந்ததால், அதைத்  தட்டிவிடவும் முடியவில்லை.   நிபந்தனைக்கு
ஒப்புக்கொண்டு, புறப்படுவதற்கு     அவர்களுடைய அனுமதியைப்
பெற்றேன்.

     அச் சமயம் எனக்கு நேட்டாலுடன்    மாத்திரமே நெருங்கிய
தொடர்பு இருந்தது. நேட்டால் இந்தியர் அன்பு என்ற  அமிர்தத்தை
என்மீது பொழிந்துவிட்டார்கள்.  ஒவ்வோர் இடத்திலும் பிரவுபசாரக்
கூட்டம் நடத்தினார்கள். விலையுயர்ந்த வெகுமதிகளையும்  எனக்கு
அளித்தார்கள்.

     1899-இல் நான் இந்தியாவுக்குப் புறப்பட்டபோதும் இத்தகைய
வெகுமதிகளை எனக்குக் கொடுத்தனர். ஆனால், இத்தடவையிலோ,
பிரிவுபசாரம் அளவு கடந்ததாக        இருந்தது. வெள்ளி, தங்கச்
சாமான்களும் அன்பளிப்பில் அடங்கியிருந்ததோடு,  விலையுயர்ந்த
வைரச் சாமான்களும் இருந்தன.

     இந்த வெகுமதிகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன
உரிமை இருக்கிறது? இவைகளையெல்லாம் வாங்கிக் கொண்ட பிறகு,
ஊதியம் பெறாமல்    சமூகத்திற்குச் சேவை செய்து வந்திருப்பதாக
நான் எண்ணிக்கொள்ளுவது எப்படி?என் கட்சிக்காரர்கள் கொடுத்த
சில வெகுமதிகளைத் தவிர மற்றவை யாவும்,     சமூகத்திற்கு நான்
செய்த சேவைக்கு என்றே முற்றும்  எனக்கு அளிக்கப்பட்டவைகள்
ஆகும். என் கட்சிக் காரர்களும் பொது வேலையில் எனக்கு உதவி
செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது,கட்சிக்காரர்கள் வேறு,
பொது ஊழியர்கள் வேறு என்று பாகுபாடு செய்துகொள்ளுவதற்கும்
இல்லை.

     கிடைத்த வெகுமதிகளில் ஒன்று     தங்கச் சங்கிலி. அது 52
பவுன் பெறுமானம் உள்ளது.       என் மனைவிக்கு என்று அதை
அளித்தனர். ஆனால், அதுவும்கூட என்னுடைய   பொதுசேவைக்கு
அளிக்கப்பட்ட வெகுமதியே.   ஆகையால்    மற்றவைகளிலிருந்து
அதை நான் தனியாக பிரித்துவிட முடியாது.

     ஒரு நாள் மாலை, இந்த    வெகுமதிகளில் பெரும் பகுதியை
எனக்கு அளித்தார்கள். அன்று இரவெல்லாம் என்னால்  தூங்கவே
முடியவில்லை. என் அறையில் அங்கும்     இங்கும் இரவெல்லாம்
உலாவினேன்; தீவிரமாகச் சிந்தித்தேன். ஆனால், ஒரு  முடிவுக்கும்
வரமுடியவில்லை.            ஆயிரக்கணக்கில் மதிப்புள்ள இந்த
வெகுமதிகளை வேண்டாம் என்று      துறந்து விடுவது எனக்குக்