பக்கம் எண் :

தியாக உணர்சி மிகுந்தது 313

Untitled Document
சகோதரர் தலைமீது விழும். அவரோ, உனக்குத் தந்தைபோல் இருந்து
எவ்வளவோ       பெருந்தன்மையுடன்      நடந்து வந்திருக்கிறார்.
அப்படியிருக்க மேலும்    அவர்மீது பாரத்தைச் சுமத்துவது உனக்குத்
தகுமா? இதுவும் இதுபோன்ற வாதங்களும் என்னுள் எழுந்தன. இவை,
ரூ.10,000-க்கு இன்ஷூர் செய்யுமாறு என்னைத்      தூண்டிவிட்டன.

     ஆனால்,      தென்னாப்பிரிக்காவில்   என் வாழ்க்கை முறை
மாறியதோடு என் மனப்போக்கும்    மாறுதலடைந்தது, சோதனையான
இக்காலத்தில் நான் செய்த ஒவ்வொரு     காரியத்தையும் கடவுளின்
பெயரால்         அவர் பணிக்கு        என்றே செய்துவந்தேன்.
தென்னாப்பிரிக்காவில்              நான் எவ்வளவு காலம் இருக்க
வேண்டியிருக்கும் என்பது        தெரியாது. இந்தியாவுக்குத் திரும்ப
முடியாமலே போய்விடுமோ என்ற     ஒரு பயமும் எனக்கு இருந்தது.
ஆகவே, என்         மனைவியையும் குழந்தைகளையும் என்னுடன்
வைத்துக்கொண்டு அவர்களைப்      பராமரிப்பதற்கு வேண்டியதைச்
சம்பாதிப்பது என்று தீர்மானித்தேன்.        இத்திட்டம் நான் ஆயுள்
இன்ஷூரன்ஸ் செய்திருந்ததற்காக           வருந்தும் படி செய்தது.
இன்ஷூரன்ஸ் ஏஜெண்டின்        வலையில் விழுந்து விட்டதற்காக
வெட்கப்பட்டேன். ‘என் சகோதரர் உண்மையாகவே  என் தந்தையின்
நிலையில்   இருப்பதாக இருந்தால், என் மனைவி விதவையாகி விடும்
நிலைமையே ஏற்பட்டாலும், அவளைப் பாதுகாப்பதை அதிகப்படியான
சுமை என்று       அவர் கருதமாட்டார்.    மற்றவர்களைவிட நான்
சீக்கிரத்தில்          இறந்து போவேன்             என்று நான்
எண்ணிக்கொள்ளுவதற்குத்தான்        என்ன காரணம் இருக்கிறது?
பார்க்கப்போனால், உண்மையில்     காப்பாற்றுகிறவர் எல்லாம் வல்ல
கடவுளேயன்றி நானோ, என் சகோதரரோ அல்ல.      நான் ஆயுள்
இன்ஷூரன்ஸ் செய்ததனால்,       என் மனைவியும் குழந்தைகளும்
சுயபலத்தில் நிற்க        முடியாதவாறு செய்துவிட்டேன். அவர்கள்,
தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளுவார்கள் என்று ஏன் எதிர்
பார்க்கக்கூடாது? உலகத்தில்          இருக்கும் எண்ணற்ற ஏழைக்
குடும்பங்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது?      அவர்களில் நானும்
ஒருவனே என்று நான் ஏன் கருதிக்கொள்ளக் கூடாது?’    இவ்வாறு
எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

     இவ்விதமான எண்ணற்ற        எண்ணங்கள் என் மனத்தில்
தோன்றிக்          கொண்டிருந்தன. ஆனால்,அவற்றின்படி நானே
உடனேயே ஒன்றும்   செய்து விடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்குத்
திரும்பிய பிறகு      இன்ஷூரன்ஸு க்கு ஒரு தவணையாவது பணம்
கட்டியதாகவே எனக்கு ஞாபகம்.

     இவ்விதமான எண்ணப்போக்குக்கு   வெளிச் சந்தர்ப்பங்களும்
உதவியாக இருந்தன. நான் முதல் தடவை     தென்னாப்பிரிக்காவில்