பக்கம் எண் :

326சத்திய சோதனை

Untitled Document
செய்வார்கள் என்று               எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

     பசுவின் பாலையோ,              எருமைப் பாலையோ நான்
சாப்பிடுவதற்கில்லை. ஏனென்றால்,      அவற்றைச் சாப்பிடுவதில்லை
என்று           விரதம் கொண்டுவிட்டேன்.    எந்தப் பாலையுமே
சாப்பிடுவதில்லை என்பது தான் விரதம்    என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், நான் இந்த விரதத்தை     மேற்கொண்ட சமயத்தில் தாய்ப்
பசுவும் தாய்   எருமையுமே என் மனத்தில் இருந்ததாலும், உயிர்வாழ
நான் விரும்பியதாலும்,      விரதத்தின் தன்மையை வற்புறுத்துவதில்
எப்படியோ என்னை நானே ஏமாற்றிக்கொண்டு        ஆட்டுப்பால்
சாப்பிடத் தீர்மானித்தேன்.          ஆட்டுப் பாலை நான் சாப்பிட
ஆரம்பித்தபோது என்னுடைய விரதத்தில் அடங்கியிருந்த  உணர்ச்சி
நாசமாக்கப்பட்டு      விட்டது என்பதை நான் முற்றும்  உணர்ந்தே
இருந்தேன்.

     ரௌலட் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து
நடத்த வேண்டும்     என்ற எண்ணமே      அப்பொழுது என்னை
ஆட்கொண்டிருந்தது. அதோடு உயிரோடு   இருக்க வேண்டும் என்ற
ஆசையும் வளர்ந்தது. இதன் விளைவாக என்   வாழ்க்கையின் மிகப்
பெரிய சோதனை ஒன்று அதோடு நின்று போயிற்று.

     ஆன்மா, எதையும் சாப்பிடுவதுமில்லை;    குடிப்பதும் இல்லை.
ஆகையால், ஒருவர் எதைச் சாப்பிடுகிறார், குடிக்கிறார்  என்பதற்கும்
ஆன்மாவுக்கும்          எந்தவிதச்    சம்பந்தமும் இல்லை என்று
விவாதிக்கப்படுகிறது என்பதை அறிவேன்.      நாம் எதை உள்ளே
போடுகிறோம் என்பது முக்கியம் அல்ல;   உள்ளிருந்து-பேச்சினாலும்
நடவடிக்கையினாலும்-எதை வெளியே விடுகிறோம்      என்பதுதான்
முக்கியம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த வாதத்தில் ஓரளவு
அர்த்தம் இருக்கிறது.   என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த
வாதத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதைவிட என்னுடைய  உறுதியான
நம்பிக்கை இன்னது என்பதைத் தெரிவிப்பதோடு திருப்தியடைகிறேன்.
கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்து அதன் மூலம் கடவுளை நாடுபவருக்கும்,
கடவுளை       நேருக்கு நேராகக்     காண விரும்புகிறவருக்கும்,
எண்ணத்திலும்  பேச்சிலும் கட்டுத்திட்டம் இருக்கவேண்டியது எப்படி
அவசியமோ அதே போல அவருடைய     சாப்பாட்டின் அளவிலும்
தன்மையிலுங்கூடக் கட்டுத் திட்டம் இருக்கவேண்டியது    முக்கியம்
என்பதே எனது திடமான நம்பிக்கை.

     என்றாலும், என்னுடைய     தத்துவத்தை    நானே நடத்திக்
காட்டமுடியாமல் இருக்கும் ஒரு விஷயத்தில்,   அத் தகவலை நான்
கூறி விடுவதோடு அதைக் கையாளுவதைக்   குறித்துக் கடுமையான
எச்சரிக்கையையும் நான் செய்யவேண்டும்.       ஆகையால், நான்