பக்கம் எண் :

354சத்திய சோதனை

Untitled Document
பற்றிய வரை அச்சபை          அதிக விழிப்புடனேயே இருந்தது.
வெள்ளைக்காரரின்   தேகநிலை கெடாமலே இருக்கும்படி பார்த்துக்
கொள்ளுவதற்காக நகரசபை ஏராளமான   தொகையைச் செலவிட்டு
வந்தது. இப்பொழுது    பிளேக் நோயை ஒழிப்பதற்குப் பணத்தைத்
தண்ணீர் போல வாரி இறைத்தது.   இந்தியர் விஷயத்தில் அச்சபை
செய்தது,      செய்யாமலிருந்து விட்டது ஆகியவைகளை  குறித்து
அநேக      குற்றச்சாட்டுகளை நான்    அதன் மீது சுமத்தியிருந்த
போதிலும், நகரிலிருந்த வெள்ளைக்கார மக்களின் நலன் விஷயத்தில்
அது காட்டிய அக்கறையை நான்    பாராட்டாமல் இருக்க முடியாது.
அதனுடைய சிறந்த முயற்சிக்கு என்னால்     இயன்ற உதவிகளைச்
செய்தேன். நகரசபைக்கு              என்னுடைய ஒத்துழைப்பை
அளிக்காதிருந்திருப் பேனாயின்,    அதனுடைய வேலைகள் அதிகக்
கஷ்டமானதாகியிருக்கும்       என்று நினைக்கிறேன். அப்பொழுது
ஆயுதந்தாங்கிய         படை பலத்தை உபயோகிக்கவும், இன்னும்
மோசமான முறைகளைக் கையாளவும்      அச்சபை தயங்கியிராது.

     ஆனால், அப்படி எதுவும்      நடவாதபடி செய்துவிட்டோம்.
இந்தியர் நடந்துகொண்ட       விதத்தைக் குறித்து நகரசபையினர்
சந்தோஷம் அடைந்தார்கள். பிளேக்       சம்பந்தமான எதிர்கால
வேலைகள் பலவும்       சுலபமாக்கப்பட்டன.          நகரசபை
விரும்புபவைகளுக்கெல்லாம்                இந்தியர் உடன்பட்டு
நடந்துகொள்ளும்படி செய்வதில் இந்திய   சமூகத்தினரிடம் எனக்கு
இருந்த       முழுச் செல்வாக்கையும்  உபயோகித்துக்கொண்டேன்.
எல்லாவற்றிற்குமே   உடன்பட்டுச் செய்துகொண்டு போவது என்பது
இந்தியருக்குக்             கஷ்டமாகவே இருந்தது. ஆனால் என்
ஆலோசனையை எந்த இந்தியரும் மறுதலித்ததாக எனக்கு  ஞாபகம்
இல்லை.

     அந்த ஒதுக்கல் குடியிருப்புப்     பகுதிக்குப் பலமான காவல்
போட்டுவிட்டார்கள். அனுமதியில்லாமல் உள்ளே போவதோ, உள்ளே
இருந்து           வெளியே வருவதோ இயலாது. நானும் என் சக
ஊழியர்களும்  மாத்திரம் நினைத்தபோது உள்ளே போய்வருவதற்கு
அனுமதிச் சீட்டுகள்          கொடுத்திருந்தார்கள். அப் பகுதியில்
குடியிருந்தவர்களையெல்லாம்        காலி செய்து விடச் செய்வது,
அவ்விதம்        காலி              செய்துவிட்டவர்களெல்லாம்
ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து பதின்மூன்று மைல்   தூரத்திலுள்ள ஒரு
திறந்த மைதானத்தில் கூடாரங்களில்   வசிக்கும்படி செய்வது, பிறகு
இந்த              ஒதுக்கல் பகுதிக்கே தீ வைத்துவிடுவது என்று
தீர்மானிக்கப்பட்டது.    உணவுப் பொருள்கள் போன்ற அவசியமான
பொருள்களுடன் இவர்களைக்    கூடாரங்களில் போய் வசிக்கும்படி
செய்யக் கொஞ்சகாலம் ஆகும்.          ஆகவே, இதற்கு நடுவில்
காவல் போட வேண்டியது அவசியமாயிற்று.

     மக்களோ, மிகவும் பயந்து போயிருந்தனர்.    ஆனால், நான்