பக்கம் எண் :

356சத்திய சோதனை

Untitled Document
குதூகலமாக வாழ ஆரம்பித்துவிட்டனர்.       நான் அங்கே போன
சமயங்களிலெல்லாம் அவர்கள் பாடிக்கொண்டும்  சிரித்துக்கொண்டும்
இருப்பதையே கண்டேன்.       திறந்த வெளியில் மூன்று வாரங்கள்
வசித்ததால் அவர்களுடைய      தேக நிலையும் விருத்தியடைந்தது.

     இவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்ட      மறுநாளே அந்த
ஒதுக்கல் பகுதி தீயிடப்பட்டுவிட்டது    என்றுதான் எனக்கு ஞாபகம்.
தீயினுக்கு இரையாகாமல்           எதையும் காப்பாற்றிக் கொள்ள
வேண்டுமென்ற எண்ணம்   நகரசபைக்கு சிறிதேனும் இல்லை. அதே
சமயத்தில்தான்-இதே        காரணத்திற்காகவே-மார்க்கெட்டிலிருந்த
நகரசபையின்                மரஉத்திரங்கள்    எல்லாவற்றையும்
கொளுத்திவிட்டார்கள். இதனால்     நகரசபைக்கு பத்தாயிரம் பவுன்
போல் நஷ்டம். மார்க்கெட்டில் எலிகள் செத்துக்  கிடக்கக் கண்டதே
இத் தீவிரமான நடவடிக்கைக்குக் காரணம்.

     நகரசபைக்குச் செலவு       ஏராளமாக ஆயிற்று. என்றாலும்,
மேற்கொண்டும்         பிளேக் பரவாதபடி வெற்றிகரமாகத் தடுத்து
விட்டார்கள். நகர மக்களும் பயம் தீர்ந்து     பெருமூச்சு விட்டனர்.

18 ஒரு நூலின் மந்திர சக்தி

     கறுப்புப் பிளேக், ஏழை இந்தியரிடையே   என் செல்வாக்கை
அதிகரிக்கச் செய்தது. அதனால்,         என் தொழில் வருவாயும்
அதிகமானதோடு        என் பொறுப்பும் அதிகமாயிற்று. புதிதாகத்
தொடர்பு ஏற்பட்ட ஐரோப்பியருடன்      நெருங்கிப் பழகியதனால்
எனக்கு ஒழுக்க ரீதியான கடமைகள் அதிகமாயின.

     சைவச் சாப்பாட்டு விடுதியில்         ஸ்ரீ வெஸ்ட் எனக்குப்
பழக்கமானதுபோல, ஸ்ரீ போலக்கும்    அங்கே பழக்கமானார். ஒரு
நாள் மாலை, என் மேஜைக்குக் கொஞ்ச      தூரத்தில் உட்கார்ந்து
சாப்பிட்டுக் கொண்டிருந்த   ஓர் இளைஞர்,     என்னைப் பார்க்க
விரும்புவதாக ஒரு சீட்டு அனுப்பினார்.  என் மேஜைக்கே வருமாறு
அழைத்தேன். அவ்வாறே வந்தார்.

     “நான், ‘கிரிடிக்’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியன். என்
பெயர் போலக். பிளேக் சம்பந்தமாகப் பத்திரிகைகளுக்குத் தாங்கள்
எழுதிய கடிதத்தைப் பார்த்தது முதல் தங்களைப் பார்க்க வேண்டும்
என்று எனக்குப் பலமான ஆர்வம் ஏற்பட்டது.  இந்தச் சந்தர்ப்பம்
கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்றார், அவர்.

     ஸ்ரீ போலக்கின் கபடமற்ற தன்மை       என்னை அவர்பால்
இழுத்துவிட்டது. அன்று மாலை நாங்கள்        ஒருவரையொருவர்
நன்றாக அறிந்து கொண்டோம்.        வாழ்க்கையின் முக்கியமான
விஷயங்களிலெல்லாம்       நாங்கள் இருவரும் ஒரேவிதக் கருத்து
உடையவர்களாக இருப்பதாகத் தோன்றியது. இவர் எளிய வாழ்க்கை