பக்கம் எண் :

தாய்நாடு நோக்கி433

Untitled Document
நெசவாளியாகவும் இன்பமான       எளிய வாழ்க்கையை நடத்திக்
கொண்டிருப்பார். இப்பொழுது அவர்        தென்னாப்பிரிக்காவில்
இருக்கிறார். அவர் பழைய        வாழ்க்கையை நடத்திக்கொண்டு
கட்டிடச் சிற்பியாக நல்ல வருமானத்துடன்        தொழில் நடத்தி
வருகிறார்.

     கப்பலில் மூன்றாம் வகுப்பில்          பிரயாணம் செய்யவே
விரும்பினோம். ஆனால், பி. அண்டு ஓ.    கம்பெனிக் கப்பல்களில்
மூன்றாம் வகுப்பு இல்லாததால்    இரண்டாம் வகுப்பில் சென்றோம்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து நாங்கள் கொண்டு வந்திருந்த  உலர்ந்த
பழங்களை உடன்கொண்டு போனோம்.           இவை கப்பலில்
கிடைக்கமாட்டா. ஆனால், புதுப் பழங்கள் தாராளமாகக் கிடைக்கும்.

     என் விலா எலும்புகளுக்கு டாக்டர் ஜீவராஜ மேத்தா,‘மெடேஸ்
பிளாஸ்திரி’ போட்டுக் கட்டி விட்டதோடு       செங்கடல் போகும்
வரையில் அதை நீக்கக் கூடாது      என்றும் சொன்னார். இதனால்
உண்டான தொல்லையை இரண்டு நாள் சகித்துக் கொண்டுவிட்டேன்.
அதற்கு மேல் என்னால்            சகிக்க முடியவில்லை. அதிகச்
சிரமப்பட்டே அந்த பிளாஸ்திரியை அவிழ்க்க   என்னால் முடிந்தது.
அதன் பிறகு உடம்பைச் சுத்தம்    செய்து கொள்ளவும் குளிக்கவும்,
மீண்டும் சுதந்திரம் பெற்றேன்.

     பெரும்பாலும் பழங்களையும்    கொட்டைப் பருப்புகளையுமே
சாப்பிட்டு வந்தேன். நாளுக்கு நாள் குணம்    அடைந்து வருவதாக
உணர்ந்தேன். சூயஸ் கால்வாய்க்குள்     பிரவேசித்த போது, அதிக
தூரம் குணமடைந்து விட்டதாக        எனக்குத் தோன்றிற்று. நான்
பலவீனமாகவே இருந்தேனாயினும்     ஆபத்தைக் கடந்துவிட்டதாக
எண்ணினேன்.          என் தேகாப்பியாசத்தையும் நாளுக்கு நாள்
அதிகமாக்கிக் கொண்டு வந்தேன்.       நடுத்தரமான வெப்பமுள்ள
பிரதேசத்தின் சுத்தமான காற்றே என் தேக நிலையில்      ஏற்பட்ட
அபிவிருத்திக்குக் காரணம் என்று கருதினேன்.

     கப்பலிலிருந்து இந்தியப்          பிரயாணிகளும் ஆங்கிலப்
பிரயாணிகளும் நெருங்கிப் பழகாமல்      தொலைவாகவே இருந்து
வந்ததைக் கவனித்தேன். தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் கப்பலில்
சென்ற சமயங்களில் கூட, இப்படி இருந்ததாக நான்  கண்டதில்லை.
எனக்கு இவ்விதம் தோன்றியது முந்திய  அனுபவங்களினாலா, வேறு
காரணத்தினாலா என்பது எனக்குத் தெரியாது. சில ஆங்கிலேயருடன்
நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், அது வெறும் சம்பிரதாயப்
பேச்சே. தென்னாப்பிரிக்கக் கப்பல்களில் சென்றபோது இருந்ததைப்
போன்ற அன்னியோன்யமான சம்பாஷணைகளே    இந்தத் தடவை
இல்லை. இதற்கு ஒன்று காரணமாக    இருக்கக் கூடும் என்று நான்
எண்ணுகிறேன். தாங்கள் ஆளும் இனத்தைச் சேர்ந்தவர்கள்  என்ற
எண்ணம்,