பக்கம் எண் :

வேலைமுறைகள்501

Untitled Document
ஆனால் இரண்டு வகைச் சமையல் என்றால் செலவு அதிகம் ஆகும்.
ஆதலால் சைவச் சமையலே       வைத்துக் கொள்ளுவது என்றும்
தீர்மானமாயிற்று. சாப்பாடு    எளிமையாக இருக்க வேண்டும் என்று
வற்புறுத்துவது அவசியம் என்றும் கருதப்பட்டது.

     இந்த ஏற்பாடுகள், எங்கள் செலவை       அதிக அளவுக்குக்
குறைத்துவிட்டன. அதோடு         ஏராளமான நேரமும் உழைப்பும்
மீதமாயின. இவை இரண்டும் நாங்கள்  மேற்கொண்டிருந்த வேலைக்கு
மிகவும் தேவையாகவும் இருந்தன.        எங்களிடம் வாக்கு மூலம்
கொடுக்க விவசாயிகள்       கூட்டம்கூட்டமாக வந்தார்கள். அப்படி
வந்தவர்களுடன் அவர்களுடைய தோழர்களும்  ஏராளமாக வந்தனர்.
நாங்கள் இருந்த         வீட்டைச் சுற்றியிருந்த திறந்த வெளியிலும்
தோட்டத்திலும் இருக்க இடம்     போதாத வகையில் பெருங்கூட்டம்
இருந்து வந்தது. என்னைத் தரிசிப்பதற்கென்று  வருபவர்களிடமிருந்து
என்னைக் காப்பதற்காக என் சகாக்கள் எடுத்துக் கொண்ட   முயற்சி
அடிக்கடி பயன் பெறுவதில்லை. ஆகையால்,   குறிப்பிட்ட நேரத்தில்
என்னைத் தரிசனத்திற்குக்                 காட்சிப் பொருள்போல்
வைக்கவேண்டியிருந்தது.  வாக்குமூலங்களை எழுதிக் கொள்ளுவதற்கு
மாத்திரம் ஐந்து முதல்        ஏழு தொண்டர்கள் வேண்டியிருந்தது.
அப்படியும் வந்தவர்களில் சிலர் வாக்குமூலம் கொடுக்க  முடியாமலே
மாலையில் வீடு திரும்ப வேண்டியதாயிற்று. இந்த    வாக்குமூலங்கள்
எல்லாமே              முக்கியமானவை அல்ல;   முன்னால் சிலர்
சொன்னவற்றையே சிலர் திரும்பத்    திரும்பச் சொல்லியிருந்தார்கள்.
என்றாலும், தாங்களும் வாக்குமூலம் கொடுக்காவிட்டால்,  அம்மக்கள்
திருப்தியடையமாட்டார்கள். இவ்விஷயத்தில்        அவர்களுடைய
உணர்ச்சியை நான் பாராட்டினேன்.

     வாக்குமூலங்களைப் பதிவு        செய்துகொண்டவர்கள், சில
விதிகளை அனுசரிக்க வேண்டும்.       ஒவ்வொரு விவசாயியையும்
சரியானபடி குறுக்கு விசாரணை செய்து, அந்தச்      சோதனையில்
திருப்திகரமாக இல்லாதவர்களின் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன.
இவ்விதம் செய்வதில் அதிகநேரம்     செலவான போதிலும் பதிவான
வாக்குமூலங்களில்         பெரும்பாலானவை சிறிதும் ஆட்சேபிக்க
முடியாதவைகளாயின.

     இந்த வாக்குமூலங்களைப்     பதிவு செய்யும் போது, ரகசியப்
போலீஸைச் சேர்ந்த ஓர் அதிகாரி எப்பொழுதும்    அங்கே இருந்து
கொண்டிருப்பார். அவர் அவ்விதம்        அங்கில்லாதபடி நாங்கள்
தடுத்திருக்க முடியும். ஆனால்,       ரகசியப் போலீஸ் அதிகாரிகள்
இருப்பதை நாங்கள் பொருட்படுத்தாமல்        இருந்து விடுவதோடு,
அவர்களை             மரியாதையாகவும் நடத்தி, அவர்களுக்குத்
தெரிவிக்கக்கூடிய       தகவல்களையெல்லாம் தெரிவிப்பது என்றும்
ஆரம்பத்திலிருந்தே நாங்கள் முடிவு செய்திருந்தோம். இதனால்