பக்கம் எண் :

கேடாச் சத்தியாகிரக முடிவு 527

Untitled Document
விட்டது என்று அவர் பதில் அளித்தார். அது அப்பொழுது எனக்குத்
தெரியாது. உத்தரவு      பிறப்பிக்கப்பட்டு விட்டது உண்மையானால்,
மக்களின்       பிரதிக்ஞை நிறைவேறி விட்டது. இந்தக் காரியத்தை
நோக்கமாகக் கொண்டதே அப்பிரதிக்ஞை என்பது நினைவிருக்கலாம்.
ஆகவே, உத்தரவில் எங்களுக்குத்     திருப்தி என்று அறிவித்தோம்.

     என்றாலும், முடிவு நான்      மகிழ்ச்சி அடையும்படி இல்லை.
ஏனெனில், ஒவ்வொரு சத்தியாக்கிரகப்  போராட்டத்தின் முடிவையும்
தொடர்ந்து வரவேண்டியதான          பெருமிதம் அதில் இல்லை.
சமரசத்திற்காகத் தாம் எதுவுமே செய்யாதவரைப் போலவே கலெக்டர்
காரியங்களைச் செய்துகொண்டு போனார். ஏழைகளிடமிருந்து தீர்வை
வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.       ஆனால், அந்தச்
சகாயம் அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை.    ஏழைகள் என்பது
இன்னார் என்பதை  நிர்ணயிப்பது மக்களுக்குள்ள உரிமை. ஆனால்,
அந்த உரிமையைச்       செயல்படுத்த அவர்களால் முடியவில்லை.
உரிமையை       நிலைநாட்டுவதற்கு வேண்டிய பலம் அவர்களுக்கு
இல்லாததைக்          குறித்துத் துக்கம் அடைந்தேன். ஆகையால்,
இப்போராட்டத்தின் முடிவு       சத்தியாக்கிரகத்தின் வெற்றி என்று
கொண்டாடப்பட்டதாயினும், முழு  வெற்றிக்கு வேண்டிய முக்கியமான
அம்சங்கள் அதில் இல்லாததனால், அதைக் குறித்து  நான் உற்சாகம்
அடைய முடியவில்லை.

     சத்தியாக்கிரகத்தின் முடிவில்       சத்தியாக்கிரகிகள் மேலும்
பலமுள்ளவர்களாகவும், ஆரம்பத்தில்         இருந்ததைவிட அதிக
உற்சாகமுள்ளவர்களாகவும் இருக்க   முடிந்தால்தான் சத்தியாக்கிரகப்
போராட்டம் பயனுள்ளதாயிற்று என்று சொல்ல முடியும்.

     ஆயினும், இப்போராட்டத்தினால்    மறைமுகமான பலன்களும்
இல்லாது போகவில்லை. இப்பலன்களை இன்று நாம் காணமுடிவதோடு
அதன் பயன்களை             அனுபவித்தும் வருகிறோம். கேடாச்
சத்தியாக்கிரகம், குஜராத் விவசாயிகளிடையே  விழிப்பு ஏற்படுவதற்கு
ஆரம்பமாக இருந்தது. உண்மையான     ராஜீயக் கல்விக்கு அதுவே
ஆரம்பமாகும்.

     டாக்டர் பெஸன்டின் சிறந்த சுயாட்சிக் கிளர்ச்சி,  உண்மையில்
விவசாயிகளிடையே ஓரளவுக்கு     விழிப்பை உண்டாக்கி இருந்தது.
ஆனால், கேடாப் போராட்டமே,      விவசாயிகளின் உண்மையான
வாழ்க்கையுடன்         தொடர்பு கொள்ளும்படி படித்த பொதுஜன
ஊழியர்களைக்             கட்டாயப்படுத்தியது. விவசாயிகளுடன்
சேர்ந்தவர்களே தாங்களும் என்பதை அவர்கள்   அறியலானார்கள்.
தங்கள் வேலை செய்வதற்கு ஏற்ற இடத்தையும்   கண்டுகொண்டனர்.
அவர்களுடைய தியாகத் திறனும் அதிகரித்தது. இந்தப்