பக்கம் எண் :

604சத்திய சோதனை

Untitled Document
மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப்போலவே நேசிக்க முடிந்தவராக
அவர் இருக்க வேண்டும்.          அந்த நிலையை அடைந்துவிட
ஆசைப்படுகிறவர் யாரும்,   வாழ்க்கையின் எந்தத் துறையிலிருந்தும்
விலகி நின்று விட முடியாது. அதனாலேயே,   சத்தியத்தினிடம் நான்
கொண்டிருக்கும் பக்தி,    என்னை ராஜீயத் துறையில்     இழுத்து
விட்டிருக்கிறது. சமயத் துறைக்கும் ராஜீயத்திற்கும்   எந்த விதமான
சம்பந்தமுமே இல்லை           என்று கூறுவோர், சமயம் என்பது
இன்னதென்பதையே    அறியாதவர்களாவர். இதைக் கொஞ்சமேனும்
தயக்கமின்றி, ஆயினும் முழுப் பணிவுடன் கூறுவேன்.

     தன்னைத் தானே      தூய்மைப்படுத்திக் கொண்டு விடாமல்,
எல்லா உயிர்களிடத்திலும் தன்னை     ஒன்றுபடுத்திக் கொள்ளுவது
என்பது முடியாத காரியம். தம்மைத்        தாம் தூய்மைப்படுத்திக்
கொள்ளாமல் அகிம்சை தருமத்தை   அனுசரிப்போமென்பது வெறும்
கனவாகவே முடியும். மனத்தூய்மை இல்லாதார் என்றுமே  கடவுளை
அறிதல்   இயலாது. ஆகையால், தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக்
கொள்ளுவது என்பது,          வெகு விரைவில் மற்றவர்களுக்கும்
தொத்திக்கொள்ளும் தன்மை உடையதாகையால்,    ஒருவர் தம்மைத்
தாமே தூய்மைப்படுத்திக் கொள்ளுவதனால், அவசியமாக தம்முடைய
சுற்றுச் சார்பையும் தூய்மைப்படுத்தி விடுவதாகிறது.

     ஆனால், ஆன்மத் தூய்மைக்கான          மார்க்கம் மிகவும்
கஷ்டமானதாகும். பூரணத் தூய்மையை ஒருவர்  அடைவதற்கு, அவர்
எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் காமக்       குரோதங்களை
அறவே       நீக்கியவராக இருக்க வேண்டும். அன்பு - துவேஷம்,
விருப்பு - வெறுப்பு என்னும்      எதிர்ப்புச் சுழல்களினின்று அவர்
வெளிப்பட்டவராகவும்           இருக்க வேண்டும். அம்மூவகைத்
தூய்மையையும் அடைவதற்காக இடைவிடாது நான்  முயற்சி செய்து
கொண்டு வருகிறேனாயினும், அந்த மூன்று தூய்மைகளும்   இன்னும்
என்னுள்     இல்லை என்பதை நான் அறிவேன். இதனாலேயேதான்
இவ்வுலகத்தின் புகழுரைகளெல்லாம் எனக்கு இன்பம்  தருவதில்லை;
உண்மையில் அவைகளினால் எனக்கு அடிக்கடி    மனக் கஷ்டமே
உண்டாகிறது. ஆயுத பலத்தைக் கொண்டு     உலகத்தையே வெற்றி
கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள்      இருக்கும் காமக், குரோத
உணர்ச்சிகளை வென்று விடுவது      அதிகக் கஷ்டமாக எனக்குத்
தோன்றுகிறது. நான்       இந்தியாவுக்குத் திரும்பியதிலிருந்து, என்
உள்ளத்தினுள்ளே மறைந்துகொண்டு            தூங்கிக் கிடக்கும்
ஆசாபாசங்களை    நான் அனுபவித்து வருகிறேன். அவை இன்னும்
என்னிடம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன   என்பதைப் பற்றிய
எண்ணம், நான் தோல்வியுறும்படி செய்து      விடவில்லையாயினும்,